Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் மனோன்மணியம்,பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுறமொழிதல்

மனோன்மணியம்

  • நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணியம் ஆகும்
  • வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது.
  • இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது.
  • எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது.
  • நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு
  • இந்நாடகம் 5 அங்கங்களையும், 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
  • இடையே “சிவகாமி சரிதம்” என்னும் துணைக் கதை ஒன்றும் உள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார்:


  • ஊர் = கேரள மாநிலம் ஆலப்புழை
  • பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடாத்தி அம்மையார்
  • இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
  • கோடாக நல்லூர் சுந்தர ஸ்வாமிகள் என்பவரைத் தமது ஞானாசிரியராகப் கொண்டு ஒழுகி வந்தார்

சிறப்பு பெயர்:


  • ராவ்பகதூர்
  • தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை

இவரின் படைப்புகள்:


  • நூல் தொகை விளக்கம்
  • திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
  • திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி
  • Some mile stones in tamil litt
  • Some early sovereigns of travameare

மொழிப்பெயர்ப்பு நூல்கள்:


  • இவர் திருமுருகாற்றுப்படை
  • நெடுநல்வாடை
  • மதுரைக்காஞ்சி
ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்


பாஞ்சாலி சபதம்

நூல் குறிப்பு:


  • மகாபாரதக்கதையை பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே பாஞ்சாலி சபதம்.
  • இது இலக்கிய நயமும், கவிநயமும் கொண்டுள்ளது.
  • பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் கொண்டது.
  • ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது
    • சூழ்ச்சிச்சருக்கம்
    • சூதாட்டச் சருக்கம்
    • அடிமைச் சருக்கம்
    • துகிலுரிதல் சருக்கம்
    • சபதச் சருக்கம்

ஆசிரியர் குறிப்பு :


  • ஆசிரியர் : பாரதியார்
  • தோற்றம் : 11.12.1882 இல் எட்டயபுரத்தில் பிறந்தவர்
  • பெற்றோர் : சின்னச்சாமி அய்யர் , இலக்குமி அம்மையார்
  • மறைவு : 1921 செப்டம்பர் 11 இல் இறந்தார்.


குயில் பாட்டு

நூல் குறிப்பு:


  • பாரதியார் பாடிய கவிதைகளுள் குயில்பாட்டு ஒப்பற்ற கற்பனைக் கதைப்பாட்டாகும்.
  • குயிலின் குரல் ஒலியில் உள்ளத்தைப் பறிகொடுத்த கவிஞர் அதன்மேல் காதல் அலைந்ததை ஒரு கனவுக் காட்சியாய்த் தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கி பாடிய அற்புதப் படைப்பாகும் குயில் பாட்டு.
  • தன்னுணர்ச்சி வெளிப்பாடாய் அமைந்த இப்பாடல், எளிய - இனிய நடையில் கவிதைச் சுவையும், கற்பனை நலமும், அழகிய வருணனையும், அகப்பொருள் நயமும் நிறைந்த சொற்சித்திரமாகும்.

ஆசிரியர் குறிப்பு :


  • பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாகத் தோன்றினார்.
  • தேசியக்கவி, மகாகவி எனப் போற்றப்படுபவர்.
  • இந்தியா, விஜயா என்னும் இதழ்களை வெளியிட்டார்.
  • சுதேசமித்திரன் என்ற இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.


இரட்டுறமொழிதல்

நூல் குறிப்பு:


  • ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.
  • இரண்டு பொருள்பட மொழிதலால் இரட்டுறமொழிதல் என கூறப்பட்டது.
  • இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர்.

ஆசிரியர் குறிப்பு :


  • ஆசிரியர் – காளமேகப்புலவர் (15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார்)
  • இயற்பெயர் – வரதன்
  • ஊர் – கும்பகோணம் (அ) விழுப்புரம் என்ற கருத்து நிலவுகிறது .
  • இவர் வைணவத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவர் .
  • இவர் சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
  • இவர் ஒரு ஆசு கவி ஆவார்.
  • இயற்றிய நூல்கள் :
    • திருவானைக்கா உலா
    • சரஸ்வதி மாலை
    • பரப்பிரம்ம விளக்கம்
    • சித்திர மடல்

அழகர் சொக்கநாதர்

ஆசிரியர் குறிப்பு:


  • அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில்பிறந்தவர்
  • இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு
  • படைப்புகள்:
    • காந்தியம்மை பிள்ளைத்தமிழ்
    • ராசி கோமதிஅம்மைபதிகம்
    • முத்துசாமி பிள்ளை காதல் பிரபந்தம்
    • கந்தியம்மை கும்மி
    • கோதை கும்மி
  • சிறப்பு:
    • காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியததற்காகஇராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி இவருக்கு வைரக்கடுக்கன் பரிசாக வழங்கினார்.
    • அழகிய சொக்கநாதப் புலவர் சிலேடைப் பாடுவதில் வல்லவர் சான்று பாடல் :

Share with Friends