Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் தேவநேயபாவாணர், அகரமுதலி , பாவலரேறு பெருஞ்சித்திரனார்,தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்

தேவநேயபாவாணர்

வாழ்க்கைக் குறிப்பு:

  • ஊர் - புத்தூர் - திருநெல்வேலி மாவட்டம்
  • பெற்றோர் - ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்

சிறப்பு பெயர்:

  • செந்தமிழ்ச் செல்வர்- தமிழக அரசு
  • செந்தமிழ் ஞாயிறு-பறம்புமலை பாரி விழாவினர்
  • மொழி ஞாயிறு-தென்மொழி இதழ்

படைப்புகள்:

  • இயற்றமிழ் இலக்கணம்(முதல் நூல்)
  • கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்
  • ஒப்பியல் மொழி நூல்
  • திராவிடத்தாய்
  • சொல்லாராய்ச்சிக் காட்டுரை
  • உயர்தரக் கட்டுரை இலக்கணம்
  • பழந்தமிழ் ஆட்சி
  • முதல் தாய்மொழி
  • தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
  • தமிழர் திருமணம்
  • இசைத்தமிழ் கலம்பகம்
  • பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
  • தமிழ் வரலாறு
  • வடமொழி வரலாறு
  • தமிழர் வரலாறு
  • தமிழ் கடன் கொடுத்து தழைக்குமா?
  • இன்னிசைக்கோவை
  • திருக்குறள் தமிழ் மரபுரை
  • தமிழர் வேதம்
  • வேர்ச்சொல் கட்டுரைகள்
  • மண்ணில் வின் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை
  • தமிழ் இலக்கிய வரலாறு
  • செந்தமிழ்க் காஞ்சி(பாடல் தொகுப்பு)
  • இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
  • மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்(இறுதி கட்டுரை)

குறிப்பு:

  • உலக முதல் மொழி தமிழ்; திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ் என்ற இவர்தம் கொள்கையை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் முயன்றார்
  • உலகத் தமிழ் கழகம் தொடங்கினார்
  • மன்னிப்பு உருதுச் சொல்; பொறுத்துக்கொள்க என்பது தமிழ்ச் சொல் என்றவர்
  • தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்கவே இறைவன் தன்னை படைத்ததாக கூறியவர்

சிறப்பு:

  • அறிஞர் அண்ணா - பாவாணர் தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இடைவிடாத நற்தொண்டாற்றி நம் அனைவரின் நிலையினையும் உயர்த்தியவர், அவருடைய புலமை தெளிவும் துணிவும் மிக்கது
  • மறைமலை அடிகளின் தனித்தமிழ்க் கொள்கையை நாடு முழுக்க பரப்பியவர்

அகரமுதலி வரலாறு

அகராதி:

  • அகரம் + ஆதி -அகராதி
  • ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொர்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர்.
  • அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது.

நிகண்டுகள்:

  • தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம்.
  • நிகண்டுகளில் பழமையானது - திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம்.
  • நிகண்டுகளில் சிறப்பானது - மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு.

அகரமுதலி:

  • திருமூலரின் திருமந்திரத்தில் “அகராதி” என்னும் சொல் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.

அகராதி நிகண்டு:

  • நிகண்டுகளில் ஒன்றான “அகராதி நிகண்டில்” அகராதி என்ற சொல் அடைமொழியாக அமைந்துள்ளது.
  • இந்நூலே அகரமுதலிகள் தோன்றுவதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
  • இந்நூலில் சொற்களின் முதல் எழுத்துக்கள் மட்டுமே அகரவரிசையில் அமைந்திருந்தன.

சதுரகராதி:

  • வீரமாமுனிவரின் சதுரகராதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
  • இது கி.பி.1732ஆம் ஆண்டு வெளிவந்தது.
  • சதுர் என்பதற்கு நான்கு என்று பொருள்.
  • பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாக பொருள் விளக்கம் இருந்தது.
  • வீரமாமுனிவர் தமிழ்-இலத்தின் அகராதி, இலத்தின்-தமிழ் அகராதி, தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, போர்த்துகீசிய-தமிழ்-பிரெஞ்சு அகராதி வெளியிட்டார்.

சங்க அகராதி:

  • “தமிழ்-தமிழ் அகராதி” ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
  • யாழ்பாணம் கதிரைவேலனாரால் “தமிழ்ச்சொல் அகராதி” வெளியிடப்பட்டது. இதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்.
  • இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.

பிற அகரமுதலிகள்:

  • குப்புசாமி என்பவர் “தமிழ்ப் பேரகராதி” வெளியிட்டார்.
  • இராமநாதன் என்பவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி” எனும் பெயருடன் வந்தது.
  • வின்சுலோ என்பவர் “தமிழ்-ஆங்கிலப் பேரகராதி” வெளியிட்டார்.

பவானந்தர்:

  • பவானந்தர் என்பார் 1925ஆம் ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்”, 1937ஆம் ஆண்டு “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார்.

சண்முகம்:

  • மு.சண்முகம் என்பவரால் “தமிழ்-தமிழ் அகரமுதலி” 1985ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது

தமிழ் லெக்சிகன்:

  • இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி “சென்னைப் பல்கலைக்கழக அகராதி”.
  • இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.
  • இவ்வகரமுதலி “தமிழ் லெக்சிகன்” என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி:

  • 1985ஆம் ஆண்டு “தேவநேயபாவாணர்”யின் “செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி”யின் முதல் தொகுதி வெளிவந்தது.
  • இரண்டாவது தொகுதி 1993ஆம் ஆண்டு வெளியானது.
  • ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.
  • படங்களுடன் வேலி வந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.

கணினி உதவியுடன் அகரமுதலி:

  • முழுமையாக கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி “கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி”.
  • விளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.

கலைக்களஞ்சியம்:

  • தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி - அபிதான கோசம்.
  • இது 1902ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.
  • இது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.

அபிதான சிந்தாமணி:

  • 1934ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறைப் போருகளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது - அபிதான சிந்தாமணி.
  • இதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.

தமிழ் வளர்ச்சி கழகம்:

  • தமிழ் வளர்ச்சி கழகம் முறையான “முதல் கலைக்களஞ்சியத்தை” தொகுத்து வெளியிட்டது.
  • இது பத்து தொகுதிகளை உடையது.
  • இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.

கலைச்சொல் அகரமுதலி:

  • காலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கக்ப்பட்டன.
  • மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
  • அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

வாழ்க்கை குறிப்பு:

  • இயற் பெயர் - துரை மாணிக்கம்
  • ஊர் - சேலம் மாவட்டம் சமுத்திரம்
  • பெற்றோர் - துரைசாமி, குஞ்சம்மாள்

சிறப்பு பெயர்:

  • பாவலரேறு
  • தற்கால நக்கீரர்

படைப்பு:

  • கொய்யாக்கனி
  • ஐயை
  • பாவியக் கொத்து
  • எண்சுவை எண்பது
  • மகபுகுவஞ்சி
  • அறுபருவத்திருக்கூத்து
  • கனிச்சாறு
  • நூறாசிரியம்
  • கற்பனை ஊற்று
  • உலகியல் நூறு பள்ளிப்பறவைகள்

இதழ்:

  • தென்மொழி
  • தமிழ்ச் சிட்டு
  • தமிழ் நிலம்

குறிப்பு:

  • உலக தமிழ் முன்னேற்ற கலகத்தை தொடங்கினார்
  • மொழி ஞாயிறு தேவநேயபாவாணரின் கொள்கைகளைப் பரப்பும் தலை மாணாக்கர்

Share with Friends