Easy Tutorial
For Competitive Exams

TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2015

33512.பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?
அவர்களிருவருக்கும் இடையே கான்வர்கேசன் நடந்தது
அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது
அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது
33513.விடை தேர்க
சரியான சொற்றொடரைத் தேர்க
தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு
பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு
பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு
உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு
33514.கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்
I மற்றும் III
II மற்றும் IV
III மற்றும் IV
II மற்றும் III
33515.முட்டையிட்டது சேவலா பெட்டையா?-இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?
பால் வழு
திணை வழு
வினா வழு
மரபு வழு
33516.வரை-இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
வரைதல்
வரைந்த
வரைந்தவன்
வரைந்து
33517.பின்வருவனவற்றைப் பொருத்துக
(a) டெலிகேட்1.கருத்துரு
(b) சாம்பியன்2. மரபுத்தகவு
(c) புரபோசல்3. பேராளர்
(d) புரோட்டோகால்4. வாகைசூடி
1 3 4 2
3 2 1 4
3 4 1 2
2 1 4 3
33518."ஊ" என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
இறைச்சி
உலகம்
உயிர்
உயர்வு
33519.து என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
ஆறு
துப்பு
உண்
துன்பம்
33520.பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) சரதம்1. நிலா முற்றம்
(b) சூளிகை2. நாடு
(c) மகோததி3.வாய்மை
(d) அவனி4. கடல்
3 1 4 2
3 2 1 4
3 4 1 2
2 1 4 3
33521.கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச சுட்டிக் காண்பிக்கவும்
கருத்துக்கள்:
மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு
ஆசிரியரை ஐயா என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு
அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு
திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு
33522."எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்" இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு
கீழக்கதுவாய்
இணை
கூழை
மேற்கதுவாய்
33523.தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க!
வெண்மதி = வெண் + மதி
வெந்துவர்ந்து = வெந்து + உவர்ந்து
காடிதனை = காடு + இதனை
கருமுகில் = கருமை + முகில்
33524.பொருந்தாத இணையினைக் காண்க
"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" - பாரதிதாசன்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார்
"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" - இளங்கோவடிகள்
"அழுது அடியடைந்த அன்பர்"-திருமூலர்
33525."நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
புறநானூறு
குறுந்தொகை
33526.திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை
I.திரு+குறள்=திருக்குறள் மேன்மை பொருந்திய குரல் வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் "திருக்குறள்" எனப் பெயர் பெற்றது
II.நான்மரை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்
III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
IV. திருவள்ளுவரது காலம் கிமு 32 என்றும் கூறுவர் இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
II, IV சரியானவை
I,III சரியானவை
III, IV சரியானவை
II, III சரியானவை
33527.பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
தேன்மழை
குயில்
தென்றல்
இந்தியா
33528.பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) கோக்கோதைநாடு1. பறவை இனம்
(b)பார்ப்பு2. சேற்று வயல்
(c) புள்ளினம்3. சேர நாடு
(d) அள்ளற்பழனம்4. குஞ்சு

(a) (b) (c) (d)
3 2 4 1
2 3 1 4
3 4 1 2
1 3 2 4
33529.நாடக இயல் எனும் நூலை இயற்றியவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
பம்மல் சம்மந்த முதலியார்
கிருஷ்ணசாமிப் பாவலர்
விபுலானந்த அடிகள்
33530.ஏலாதி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், ஏலாதி
II. ஏலாதி நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன
II மற்றும் III
III மற்றும் IV
I மற்றும் III
I மற்றும்IV
33531.பொருந்தா இணையைக் கண்டறிக
வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்
இயேசு பெருமான் - எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
சிவபெருமான் - சுந்தரர்
புத்தபிரான் - நீலகேசி
நபிகள் நாயகம் - உமறுபுலவர்
Share with Friends