Easy Tutorial
For Competitive Exams

Science QA வேதகாலம் (Vedic Period) Test Yourself

47921.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. கோயில்களோ, சிலை வழிபாடோ முந்தைய வேதகாலத்தில் இல்லை.
2. இயற்கையையும், அதன் சக்திகளையும் வணங்கினர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47922.கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் எந்தப் பகுதியிலிருந்து வந்தனர்?
சப்த சிந்து
மத்திய ஆசியா
ஆரிய வர்த்தம்
ஆரியம்
47923.ஜனக மஹாராஜாவினால் கௌரவிக்கப்பட்டவர்?
அனோஜா
மைத்ரேயி
பிரியதர்சனா
கார்கி
47924.வேதங்களின் சரியான வரிசை காண்க?
சாம, அதர்வண, ரிக், யஜர்
ரிக், சாம, அதர்வண, யஜர்
ரிக், யஜர், சாம, அதர்வண
அதர்வண, யஜர், ரிக், சாம
47925.வருண தர்மம் என்றும் அழைக்கப்பட்ட சாதி அமைப்புமுறை எப்போது தோன்றியது?
முன் வேதகாலம்
பின் வேதகாலம்
ரிக் வேதகாலம்
இவை அனைத்தும்
47926.ஆரியர்கள் நாகரிகம் எது?
நகர நாகரிகம்
கிராம நாகரிகம்
ஆரிய வர்த்தம்
இவற்றுள் எதுவுமில்லை
47927.ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி எது?
சப்த சிந்து
மத்திய ஆசியா
தமிழ்நாடு
சிந்து
47928.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. முன் வேதகாலத்தில் பெண்கள் மதிக்கத்தக்க நிலையினை பெற்றிருந்தனர். ஆனால் விதவைகள் மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.
2. முன் வேதகாலத்தில் ஆண்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாகவே பெண்கள் நடத்தப்பட்டார்கள்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47929.ரிக் வேதம் எத்தனை பாடல்கள் உடையது?
1020
1208
1038
1028
47930.பிற்பட்ட வேதகாலம் எது?
கி.மு. 4000 -கி.மு.600
கி.மு. 4000 -கி.மு.600
கி.மு. 1000 -கி.மு.600
கி.மு. 5000 -கி.மு.600
47931.இந்தியாவில் அவர்கள் குடியேறிய பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
சப்த சிந்து
மத்திய ஆசிய
ஆரிய வர்த்தம்
இவற்றுள் எதுவுமில்லை
47932.பொருத்துக: பட்டியல் 1 பட்டியல் 2 ஆயுர்வேதம் - பாடல் கலை தனுர்வேதம் - சண்டைப் பயிற்சி காந்தர்வ வேதம் - கட்டடக்கலை சில்ப வேதம் - மருத்துவம்
3,4,1,2
4,2,1,3
2,1,4,3
1,2,3,4
47933.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :
1. முன் வேதகாலத்தில், தொடக்கத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் கல்வி கற்றனர். ஆனால் அவர்கள் ஆன்மிகம் போன்றவற்றில் பங்குபெறவில்லை.
2. பின் வேதகாலத்தில் சபா, சமிதி, போன்ற அமைப்புகள் வலுவிழந்தன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47934.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. ராஜாவிற்கு நிருவாகத்தில் உதவி செய்ய புரோகிதர், சேனானி போன்ற அதிகாரிகளும் சபா, சமிதி, போன்ற அமைப்புகளும் இருந்தன.
2. சபா - ஊர்மக்களின் பிரதிநிதிகளை கொண்ட அவை, சமிதி - முதியோர் அவை.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47935.கீழ்கண்ட வாக்கியங்களில் பின் வேதகாலம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1. பெண்களின் நிலையும் மதிப்பும் குறையத் தொடங்கின. கீழ்ப்படிந்து நடத்தல், பொது நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள அனுமதிக்கப்படவில்லை
2. பெண்களுக்கு சொத்துரிமை இல்லை.
3. ஆளும் சபைகளில் பங்கு கொள்ளும் அரசியல் உரிமைகளையும் இழந்தனர். குழந்தைத் திருமணம் பரவலாக வழக்கத்திற்கு வந்தது.
4. உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இல்லை.
5. கல்வியில் சிறந்து விளங்கிய கார்க்கி, மைத்ரேயி போன்ற பெண்களும் இருந்தனர்.
1,2 மற்றும் 5
3 மற்றும் 4
2,3 மற்றும் 4
1,2,3 மற்றும் 5
47936.முன் வேதகாலத்தில் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்ட அலகு எது?
பாலி
பாகா
நிஷ்கா
சுல்க்
47937.பின்வருவனவற்றுள் சரியான இணை எது?
1. அசுவமேதையாகம் - அரசன் தனது குதிரை எதிர்ப்பின்றி சென்ற இடங்களை தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உரிமை கொண்டாடுவது.
2. வாஷ்பேயம் - தேர்பந்தயம்
3. பாலி, சுல்க், பாகா, - நாணயங்கள்
4. நிஷ்கா, சுவர்ணா, சதமானா – வரிகள்
1 மற்றும் 2
3 மற்றும் 4
2 மற்றும் 4
1,2,3, மற்றும் 4
47938.முற்பட்ட வேதகாலம் எது?
கி.மு. 20,000 - கி.மு. 1000
கி.மு. 6000 - கி.மு. 2000
கி.மு. 7000 - கி.மு. 1000
கி.மு. 2000 - கி.மு. 1000
47939.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. பின் வேத காலத்தில் தனுர்வேதம் என்ற போர்க்கலை அரசகுமாரர்களுக்கு மட்டும் கற்பிக்கப்பட்டது.
2. பின் வேத காலத்தில் குருகுல கல்வி முறையே இருந்தது. அது பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47940.சமுதாயத்தின் அடிப்படை அழகு எது?
குடும்பம்
கிராமம்
ஜனா
விசு
Share with Friends