Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கணம் தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

தொடரும் தொடர்பும் அறிதல் (Thodarum Thodarpum arithal)

கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொடர்புடைய சான்றோரையோ அல்லது நூலையோ தேர்வு செய்தலே தொடரும் தொடர்பும் அறிதல் ஆகும்.

இதனை அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்

அடைமொழியால் அறியப்படும் நூல்கள் என்றும் அழைக்கலாம்.

தமிழறிஞர்களின் மேற்கோள்கள்

பாரதியார் :
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா எனப் பாராட்டப பெற்றவர்.

"நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" என்று போற்றியவர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழ்உடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.

பாரதிதாசன்:
திருவள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே.

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை.

நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா எனப் பாராட்டப பெற்றவர் பாரதியர். பாராட்டியவர் பாரதிதாசன்.

திருக்குறளில் இல்லாது இல்லை, இணை இல்லை முப்பாலுக்கு இந்நிலத்தே.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் என்று பெரியாரைப் புகழந்தவர் - பாரதிதாசன்

எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதியாக இயற்றுதலும் வேண்டும்
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்

தமிழ் ஒளியை மதங்ககளிலே சாய்க்காமை வேண்டும்
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை:
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அதற்கோர் குணமுண்டு.

பெரியார்:
நாட்டில் உள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருத்தல்.

பெண்ணடிமைக்கு முதன்மைக் காரணம் சொத்துரிமை இல்லாதது.

அரசின் அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்படும்.

காந்தியடிகள்:
இந்தியனாக இருப்பதைக் காட்டிலும் மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது.

ஞானப்பிரகாசம் :
மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் என்பவர் 1812-ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.

பெருஞ்சித்திரனார்:
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றி நாள் முதல் உயிர்மொழி.

பரிதிமாற்கலைஞர்:
திருந்திய பண்பும், சீர்த்த நாகரிககமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம்.

ஒட்டக்கூத்தர்:
“போலிப் புலவர்களின் தலையை வெட்டியவர்”

கெல்லட்:
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது.

மாக்ஸ்முல்லர்:
தமிழ் மிகவும் பண்பட்ட மொழி எனக் கூறிய மொழியியல் அறிஞர்.

பாவணர்:
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்ட செம்மொழி அதுவே நம்மொழி.

எமினோ:
இன்றைய மொழியில் அறிவியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகிறது.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்:
“பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” – என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர்.

அதிவீரராமபாண்டியன்:
“போலிப் புலவர்களைத் தலையில் குட்டியவர்”.

வில்லிபுத்துரான்:
“போலிப் புலவர்களின் காதை அறுத்துவர்”.

திருநாவுக்கரசர்:
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நகரத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோர்.

அரிச்சந்திரன்:
“அனைத்து இழப்பினும் உண்மையை இழக்கில்லேன்”

குலசேகர ஆழ்வார்:
தானோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே.

வள்ளலார்:
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.

இறவாத நிலை தரும்மொழி தமிழ்மொழி.

கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக”.

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுளர் ஆகிய உலகியல் நடத்தல் வேண்டும்.

அயோத்திதாசப் பண்டிதர்:
உங்களுடைய தருமமும் கருமமும் உங்களைக் காக்கும் .

தாராபாரதி:
வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்.

திருமூலர்:
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

கண்ணதாசன்:
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

கெலன் கெல்லர்:
வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை, ஒன்று போால் இன்னொன்று வரும், அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமையாகாது.

திரு.வி.க. :
ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன் தாய், தாய், தாய் என்று போற்றுகின்றான்

ஒளவையார்:
மீதூண் விரும்பேல்

சுரதா:
பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்.

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர் (Adaimozhiyal Kurikkaperum Sandror)

அடைமொழிகள்சான்றோர்கள்
தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா பாரதியார்
பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி பாரதிதாசன்
காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் அண்ணாமலை
காந்தீயக் கவிஞர் நாமக்கல் கவிஞர்
சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் வேங்கட ராஜூலு ரெட்டியார்
உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் மு.வரதராசனார்
சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம்
சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின் செல்வன் அனுமன்
தமிழ் தென்றல் திரு.வி.க.
வள்ளலார் ராமலிங்க அடிகளார்
கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் ஜி.யூ.போப்.
ஆசு கவி காளமேகப் புலவர்.
எழுத்துக்கு இளம்பூரணார்.
சொல்லுக்கு சேனாவரையார்.
உரையாசிரியர் இளம்பூரணார்.
உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர்
தமிழ் வியாசர் நம்பியார் நம்பி.
புதினப் பேரரசு கோ.வி.மணிசேகரன்
ஏழிசை மன்னர் தியாகராய பாகவதர்
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்
கவிக்கோ அப்துல் ரஹ்மான்
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை கல்கி
தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி அகத்தியர்
தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன், இராமதேவர் (கல்வெட்டுகள்), அருண்மொழித் தேவர் சேக்கிழார்
இலக்கண தாத்தா மே.வி.வேணுகோபால்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் புதுமைப்பித்தன்
தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் ஜெயகாந்தன்
தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி அண்ணாதுரை
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா மு.வரதராசனார்
புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் ந.பிச்சமூர்த்தி
தமிழ் தாத்தா உ.வே.சா
தமிழ் நாடகத் தந்தை சம்பந்த முதலியார்
தமிழ் நாடக தலைமையாசிரியர்,நாடக உலகின் இமயம் சங்கரதாஸ சுவாமிகள்
உவமைக் கவிஞர் சுரதா
தெற்காசிய சாக்ரடீஸ் பெரியார்
தமிழ் உரைநடையின் தந்தை,தமிழ் இலக்கிய தோற்றுனர் வீரமாமுனிவர்
குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர், தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன், பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு வாணிதாசன்.
கவி யோகி சுத்தானந்த பாரதி.
தற்கால உரைநடையின் தந்தை ஆறுமுக நாவலர்.
தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலைஅடிகள்
வில்லுப் பாட்டுக்காரர் கொத்தமங்கலம் சுப்பு.
ஆசிய ஜோதி நேரு
ஆசிய ஜோதி நூலை எழுதியவர் கவிமணி
மூல நூலை எழுதியவர் எட்வின் அர்னால்ட்
திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் மாணிக்கவாசகர்
தமிழ்நாட்டின் அட்லி சேஸ் சுஜாதா
தென்னாட்டு தாகூர் வெங்கட ரமணீ
பண்டித மணி கதிரேசன் செட்டியார்
சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் காரைக்கால் அம்மையார்
வெண்பா பாடுவதில் வல்லவர் புகழேந்தி
பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி பெரியாழ்வார்
தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. அகிலன்
தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் தாயுமானவர்
கவிராட்சசன் ஓட்டக்கூத்தர்
திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)
நாட்டுப்புறவியலின் தந்தை ஜேக்கப் கரீம்.
தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை வானமா மாலை.
மண் தோய்ந்த புகழினான் கோவலன்
வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் ஆறுமுக நாவலர்
பொய்யா குலக்கொடி நதி வைகை
கணக்காயர் என்பவர் சோமசுந்தர பாரதியார்
நீதி நாயகர் வேதநாயகம் பிள்ளை
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
முச்சங்கம் வளர்கூடல் நகர் மதுரை
தமிழ் நந்தி மூன்றாம் நந்தி வர்மன்
தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் நக்கீரர்
தமிழ் கவிஞருள் அரசர் திருத்தக்கதேவர்
தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன், பராங்குசன், சடகோபன் நம்மாழ்வார்
சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி ஆண்டாள்
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
சைவ சமயத்தின் செல்வி மங்கையற்கரசியார்
திராவிட ஒப்பிலக்கண தந்தை கார்டுவெல்
நவீன கம்பர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நாவலர் சோமசுந்தர பாரதி
இந்திய சினிமா தந்தை தாதாசாகிப் பால்கே
ஆட்சி மொழிக் காவலர் ராமலிங்கனார்
ஆஸ்தானக் கவிஞர் நா.காமராசன்
கவியரசு வைரமுத்து,கண்ணதாசன்
திருக்குறளார் வி.முனுசாமி
கவிப்பேரரசு வைரமுத்து
தசாவதாணி செய்கு.தம்பியார்
பண்மொழிப் புலவர் அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் கரிகாலன்
திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் முதலாம் ராஜராஜன்
சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு, தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர் திருநாவுக்கரசர்
தோடுடை செவியன், காளி வள்ளல். ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல், திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் திருஞான சம்பந்தர்
ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார் வன்தொண்டர், தம்பிரான் தோழர் சுந்தரர்.
நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி ஔவையார்
மும்மொழிப் புலவர் மறைமலை அடிகள்
விஷ்ணுசித்தர் பெரியாழ்வார்.
தேசியம் காத்த செம்மல்(திரு.வி.க), பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் முத்துராமலிங்க தேவர்
திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் திரிகூடராசப்ப கவிராயர்
இரட்டைப் புலவர்கள் இளஞ்சூரியர், முதுசூரியர்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் (Adaimozhiyal Kurikkaperum Noolgal)

மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் சீவக சிந்தாமணி
தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. திருக்குறள்
செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் சிலப்பதிகாரம்
இரட்டைக் காப்பியங்கள்சிலப்பதிகாரம்/மணிமேகலை
நெடுந்தொகை அகநானூறு
கற்றறிந்தார் ஏற்கும் நூல் கலித்தொகை
பௌத்த காப்பியங்கள் மணிமேகலை /குண்டலகேசி.
மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் மணிமேகலை
புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் புறநானூறு
வஞ்சி நெடும் பாட்டு பட்டினப்பாலை
பாணாறு பெரும்பாணாற்றுப்படை
பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு குறிஞ்சிப்பாட்டு
புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை திருமுருகாற்றுப்படை
வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் நாலடியார்
சின்னூல் என்பது நேமிநாதம்
வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி நறுந்தொகை
திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் பெரிய புராணம்
ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் இராமாயணம்
முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு பழமொழி
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் ராமாவதாரம்.
தமிழ் மொழியின் உபநிடதங்கள் தாயுமானவர் பாடல்கள்
குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் குற்றாலக் குறவஞ்சி
குழந்தை இலக்கியம் பிள்ளைத் தமிழ்
உழத்திப்பாட்டு பள்ளு
இசைப்பாட்டு பரிபாடல் / கலித்தொகை
அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை பெருங்கதை
தமிழர் வேதம் திருமந்திரம்
தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி திருவாசகம்
தமிழ் வேதம் நாலாயிர திவ்ய பிரபந்தம்
குட்டி தொல்காப்பியம் தொன்னூல் விளக்கம்
குட்டி திருவாசகம் திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.
பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் பிள்ளைத் தமிழ்.
திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் திருவள்ளுவ மாலை.
புலன் எனும் சிற்றிலக்கிய வகை பள்ளு
தூதின் இலக்கணம் இலக்கண விளக்கம்.
தமிழின் முதற்கலம்பகம் நந்தி கலம்பகம்
தமிழர்களின் கருவூலம் புறநானூறு
96 வகை சிற்றிலக்கிய நூல் சதுரகாதி.
கிருஸ்துவர்களின் களஞ்சியம் தேம்பாவணி
தமிழரின் இரு கண்கள் தொல்காப்பியம் /திருக்குறள்
வடமொழியின் ஆதி காவியம் இராமாயணம்
64 புராணங்களைக் கூறும் நூல் திருவிளையாடற் புராணம்
இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் கலித்தொகை
இயற்கை பரிணாமம் கம்பராமாயணம்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம் சிலப்பதிகாரம் /மணிமேகலை
நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் நாலடியார்.
பாவைப்பாட்டு திருப்பாவை
பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் கலம்பகம்

நூல்களில் உள்ள மேற்கோள்கள்

தொல்காப்பியம்
“கற்பெனப்படுவது பிறன் நெஞ்சு புகாமை”

திருக்குறள்
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

“உள்ளுவதெல்லாம் உயர் வுள்ளல்”

“உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”

“காண முயலெய்த அசும்பில்”

“பெயக் கண்டும் நஞ்சுண்டு அமைவர்
நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்”

“இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன்
கொடுப்பரிலானுங் கெடும்”

ஆத்திச்சூடி
“மனம்போன போக் கெல்லாம் போக வேண்டாம்”

“அறம் செய்ய விரும்பு”

“நாலடியும் இரண்டடியும் படித்தவனிம்
வாயடியும் சொல்லடியும் சொல்லாது”

“அறிஞர்க்கழகு கற்றுணர்ந்த அடங்கல்”

“எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான்”

கம்பராமாயணம்
“உடையாரும் இல்லை, இல்லாரும் இல்லை மாதோ”

“பூழிவெம் கானம் நண்ணி ஏழிரண்டு ஆண்டின் வா”

நற்றிணை
“முந்தை இருந்து நட்டோர கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்”

குறுந்தொகை
“யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளீர்”

“வினையே ஆடவருக்கு வால்நுதல்
மனை உறை மகளிருக்கு ஆடவர் உயிர்”

“விருந்து வர கரைந்து காக்கை”

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி”

“நிலத்தினும் பெரிதே வானினும் உயரந்தன்று?
நீரினும் ஆரளவின்றே”

“செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”

பரிபாடல்
“தீயனுள்தென்றல் நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ”

“யான் இரப்பவை பொன்னும் பொருளும் போகவும் அல்ல”

அகநானூறு
“உயிர் இயைந்தன்ன நட்பின் அவ்உயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவு அரியாளே”

புறநானூறு
“செல்வத்துள் பயனே ஈதல்”

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

“பெரியோரை இகழ்தல் அதனினும் இலமே”

“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்ந்த மலர்தலை உலகம்”

“நல்லது செய்தல் ஆற்றீர் ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்”

“ஒருவீர் தோற்பினும் தோற்பதுங்குடியே
இருவர் வேறலும் இயற்கையு மன்றே”

“நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிருவாள் அருஞ்சம் முருக்கிக்
கயிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே”

“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலேன”

“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”

“வெயிலென முனியேன் பனியென மடியேன்”

“ஈயென இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று”

திருமுருகாற்றுப்படை
“அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல் கெழு கடவுள் புதல் வமால்வரை
மலைமகள் மகனே மற்றோர் கூற்றே
வெற்றிவேல் போர்க் கொற்றவை சிறுவ”

பொருநராற்றுப்படை
“ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறுதலை பெயர்கும் மருவின் பாலை”

சிறுபாணாற்றுப்படை
“தமிழ் நிலை பெற்ற தாங்க மரபின்
மகிழ்நனை மருகின் மதுரை”

பழமொழி
“நிறைகுடம் நீர்தளும்பளில்”

“ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

“ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடம் உருப்படாது”

“கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்”

தேவாரம்
“நாமர்க்கும் குடி அல்லோர் நமனை அஞ்சோம்”

“இன்பமே என்னாளும் துன்பமே இல்லை”

“குனிந்த புருவம் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்”

“குறிக்கோளிலாது கெட்டேன்”

தமிழ்விடு தூது
“ஒருந்தமிழே உன்னால் இருந்தேன் – இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

சிலப்பதிகாரம்

“மாசறுபொன்னே வலம்புரி முத்தே
காசறுவிரையே கரும்பு தேனே”

“ஈன்ற குழந்தை எடுத்து வளர்க்குதூஉம்
சான்றோரும் உண்டு கொல் சான்றோரும் உண்டு கொல்”

“பூம்புகார் போற்றதும் பூம்புகார் போற்றதும்
மாமலை போற்றுதும், திங்களை போற்றுதும்”

“ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதம்
திங்களை போற்றுதும், திங்களை போற்றுதும்”

“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் போற்றுதும்”

“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுவது”

“அரசியல் பிழைந்தோருக்கு அரண் கூற்றாவதுவும்”

“கள்வனைக்கோறல் கடுங்கேலன்று”

“தேரா மன்னா செப்புவ துடையேன்”

“எழுகென வெழுந்தாய் என்செய்தனை”

“யானோ அரசன் யானே கள்வன்”

“பத்தினை கடவுளை பரசல் வேண்டும்”

“எவ்வயிர்க்காயினும் இரங்கல் வேண்டும்”

“மண்டிணி நாலந்து வாாவோர்க் கெல்லாம்”

“அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்”

மணிமேகலை
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்”

“உண்டி உடையும் உறையடு மல்லது கண்டதில்லை”

“எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்
மண்டினி ஞாலத்து வாவோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரு செல்வமும் நில்லா”

“உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்”

“அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க்கெல்லாம்”

“உண்டி உடையும் உறையுடு மல்லது கண்டதில்லை”

“பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது”

Share with Friends