Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2013 Page: 2
34162.வேர்ச்சொல் தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
பற்றுக
பற்றற்றான்
பற்றி
பற்று
34163."நான்மணிமாலை" - என்ற சொற்றொடர் குறிப்பது
முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம்
முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
முத்து, மரகதம், கெம்பு, மாணிக்கம்
முத்து, பவளம், வைரம், மாணிக்கம்
34164.சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது
நுபுவத்துக் காண்டம்
விலாதத்துக் காண்டம்
ஹிஜ்ரத்துக் காண்டம்
மேற்கூறிய அனைத்தும்
34165."வள்ளைக்கு உறங்கும் வளநாட"
வள்ளை- என்பதன் பொருள் யாது?
நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும்பாட்டு
இவை எதுவும் இல்லை
34166."மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்" என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
தேவாரம்
திருவாசகம்
திருக்கோவையார்
திருப்பள்ளியெழுச்சி
34167."ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை" - இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?
சீர் மோனை அமைந்துள்ளது
சீர் முரண் அமைந்துள்ளது
சீர் இயைபு அமைந்துள்ளது
கீழ்க்கதுவாய் மோனை அமைந்துள்ளது
34168.தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
வினாப் பொருள் தரும் வாக்கியம்
ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்
முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
34169."திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக்கூறியவர்
கி.வா.ஜ
கி.ஆ.பெ.வி
திரு.வி.க.
உ.வே.சா.
34170."தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே"-இத்தொடரில் "திண்டிறல்" என்னும் சொல்லிற்கு
கொடுமையான
கடுமையான
எடுப்பான
உறுதியான
34171.துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
மீரா
முடியரசன்
கண்ணதாசன்
பெருஞ்சித்திரனார்
34172."ஏற்பாடு" என்பதன் பொருள்
சூரியன் உதிக்கும் நேரம்
ஏற்றப்பாட்டுப்பாடுதல்
சந்திரன் தோன்றும் நேரம்
சூரியன் மறையும் நேரம்
34173."க"- என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?
அரசன்
காற்று
மயில்
காத்தல்
34174."சலவரைச் சாரா விடுதல் இனிதே"
"சலவர்"- என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்
Sorrow full person
Importer
Violent person
Deceitfull person
34175.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
தாலாட்டு சீராட்டு பாராட்டு நீராட்டு
நீராட்டு பாராட்டு சீராட்டு தாலாட்டு
பாராட்டு நீராட்டு தாலாட்டு சீராட்டு
34176.செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
தச்சன் நாற்காலியைச் செய்தான்
நாற்காலியைச் செய்தவன் தச்சன்
நாற்காலியைத் தச்சன் செய்தான்
34177.கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்
கலித்தளை
வஞ்சித்தளை
இயற்சீர் வெண்டளை
வெண்சீர்வெண்டளை
34178.பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை - கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக
பரிந்து xவெறுத்து
பரிந்து x விரும்பி
தெரிந்து x உணர்ந்து
தெரிந்து xஆராய்ந்து
34179."மூதூர்" எத்திணைக்குரிய ஊர்?
மருதம்
பாலை
குறிஞ்சி
நெய்தல்
34180.பின்வருவனவற்றுள் "ஈறுபோதல்", "இனமிகல்" என்னும் விதிகளின்படிபுணராதது
நெடுங்கடல்
செங்கடல்
கருங்கடல்
கருங்குயில்
34181.பொருந்தாத இணையைக் கண்டறிக
வீரமாமுனிவர்- பரமார்த்த குருகதை
தேவநேயப்பாவாணர் - தமிழர் திருமணம்
திரு.வி.க. - சைவத்திறவு
பெருஞ்சித்திரனார்-தமிழ்ச்சோலை
Share with Friends