Easy Tutorial
For Competitive Exams
GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) QA இந்திய பொருளாதாரம் Prepare Q&A Page: 3
56907.கிராமப்புறங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த PURA என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
ஜவஹர்லால் நேரு
இந்திராகாந்தி
இராஜேந்திர பிரசாத்
அப்துல் கலாம்
Explanation:

ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் பயன்படுத்தாத மற்றும் குறைவாக பயன்படுத்தி வரும் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த இயலும்.
56908.கூற்று 1: எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டைத் தன்மை ஆகும்.

கூற்று 2: வளர்ந்த மற்றும் பின் தங்கிய நிலை, அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத நிலை, பாரம்பரிய மற்றும் நவீன நிலை, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படா நிலை, ஏழை மற்றும் பணக்காரர், திறமைமிக்கவர் மற்றும் திறமையற்றவர் போன்ற முரண்பாடான சூழல்கள் ஊரக பகுதிகளில் நிலவுகின்றன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
56909.இந்தியாவில் 2015ஆம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் சாதி ரீதியான கணக்கீட்டின்படி ______________ சதவீத மக்கள் ஊரக பகுதிகளில் வசிக்கின்றனர்.
62%
68%
73%
75%
Explanation:
இதில் 18.5% மக்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், 11% மக்கள் பழங்குடியினர்.
56910.தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு (NSSO, 2002-2003) புள்ளிவிவரப்படி, ________________ சதவீத ஏழைகள் அரசுடமை வங்கிகளில் கடன் பெறுகின்றனர்.
20%
30%
40%
50%
Explanation:

அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு (AIDIS 2002)ன் படி 1991 ல் 66.3% ஆக இருந்த அமைப்புக் கடன் 2002ல் 57.1% ஆக குறைந்தது. இந்த குறைவு அமைப்புசாரா கடன்களின் அதிகரிப்பை காட்டுகிறது.
56911.பின்வருவனவற்றுள் ஊரக கடன்களுக்கான காரணங்கள் எவை?


1. விவசாயிகளின் ஏழ்மை நிலை

2. பருவமழை பொய்த்தல்

3. நிலங்கள் தொடர்பான வழக்குகள்

4.வட்டிக்குகடன் தருவோர் மற்றும் அதிக வட்டிவீதம்
அனைத்தும்
1, 2, 4
2, 3, 4
1, 3, 4
56912.இந்தியாவில் 2009ஆம் ஆண்டில் குறு கடன் வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை ___________ ஆக இருந்தது.
50
120
150
180
Explanation:
குறுநிதியானது குறுங்கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதில் சிறிய, இலாப நோக்கமில்லாத நிறுவனங்களிலிருந்து பெரிய வங்கிகள் வரை அடங்கும். அரசு சாராத நிறுவனங்கள் இவ்வகை கடன் வழங்குவதில் முன்னோடியாக விளங்குகின்றன.
56913.31.3.2017 நிலவரப்படி 100 சதவீத மின்வசதி பெற்ற மாநிலங்களில் தவறானது எது?
குஜராத்
ஆந்திரா
தெலுங்கானா
கர்நாடகா
Explanation:

31.3.2017 நிலவரப்படி கீழ்க்கண்ட 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முழுமையான அதாவது 100 சதவீத மின்வசதி அடையப்பட்டுள்ளது. அவை சண்டிகர், டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேளி, கோவா, குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கானா, அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் திரிபுரா ஆகியவை ஆகும்.

56914.சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டம் (JNNURM) - 2005
2. இந்திரா ஆவாஸ் யோஜனா - 1984
3. பாரத் நிர்மான் யோஜனா – 2005
4. பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் சதக் (PMAGSY) – 2010
அனைத்து சரி
1, 3, 4 சரி
1, 2, 4 சரி
2, 3, 4 சரி
Explanation:

இந்திரா ஆவாஸ் யோஜனா: 1985 - 1986
56915.சரியான இணையைத் தேர்ந்தெடு.
1. மனித மேம்பாட்டுக் குறியீடு – HDI
2. மகளிர் வல்லமைக் குறியீடு – WEI
3.பாலின வேறுபாட்டுக் குறியீடு – GDI
4. இயல் தர வாழ்க்கைக் குறியீடு – PQLI
5.மொத்த தேசிய மகிழ்ச்சிக் குறியீடு – GNHI
அனைத்தும் சரி
1, 2, 4, 5 சரி
2, 3, 4 சரி
1, 3, 4, 5 சரி
Explanation:

மேற்கண்ட பொருளாதாரக் குறியீடுகளை மேம்படுத்துவதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் நிலையை மேம்படுத்த இயலும்.
56916.ஒருபுறம் கிராமங்கள் காலியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் மாறுவதை "இரட்டை நஞ்சாக்கல்" என குறிப்பிட்டவர்
சுமாசர்
J.M. கீன்ஸ்
H.W. சிங்கர்
சர் மால்கம் டார்லிங்
Explanation:

இரட்டை நஞ்சாக்கல் போன்ற தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று சுமாசர் அவரின் சிறியது அழகு’ என்ற நூலில் விளக்குகிறார்.
56917.திட்டக்குழுவின் கணக்கீட்டின்படி 2009 - 2010ல் ஊரக பகுதியில் வறுமையில் உள்ள மக்கள் சதவீதம்
33.80%
44.50%
54.10%
51.20%
Explanation:
2009-10ல் மொத்த வறுமை சதவீதம் 33.80.
56918.சுயஉதவிக் குழுக்கள் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
சுய உதவிக்குழு என்பது ஒரே மாதிரியான சமூக பொருளாதாரப் பின்னணி கொண்ட 20 பெண்கள் வரை (சராசரியாக 14 பேர்) கொண்ட தன்னிச்சையான அமைப்பு ஆகும்.
இதன் உறுப்பினர்கள் மாதந்தோறும் சிறுதொகையான ரூ.10 முதல் ரூ.50 வரை வங்கியில் சேமிக்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு 6 மாதங்கள் சேமித்த பிறகு சிறிய தொகைகளாக குழுவிலுள்ள தேவைப்படும் உறுப்பினர்களுக்கு வட்டிக்கு வழங்குகின்றனர்.
செயல்பாடுகளை வைத்து சுயஉதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டத்தில் (SBLP) சேர்க்கப்படுகிறார்கள்.
வங்கி இணைப்புத் திட்டம் 1982ல் ஆரம்பிக்கப்பட்டது
Explanation:
சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி இணைப்புத் திட்டம் 1992 ல் ஆரம்பிக்கப்பட்டது.
56919.சிறிய அலகு முன்னேற்றம் மற்றும் மறுநிதியளிக்கும் முகவர் வங்கி (MUDRA) தொடங்கப்பட்ட ஆண்டு
ஏப்ரல் 4, 2015
ஏப்ரல் 8, 2015
ஏப்ரல் 4, 2016
ஏப்ரல் 8, 2016
Explanation:
MUDRA என்பது ஒரு பொதுத்துறை சார்ந்த நிதி நிறுவனம் ஆகும். இது சிறு, குறு நிதி நிறுவனங்களுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் (MSMEs) கடன் வழங்குகிறது.
56920.ஸ்லேட்டர் ஆய்வு செய்த கிராமங்களை கீழ்க்கண்ட எந்த ஆண்டுகளில் பல்வேறு ஆராய்ச்சி குழுவினரும் ஆய்வு செய்தனர்

1. 1930
2. 1940
3. 1950
4. 1960
5. 1970
1, 2, 3
1, 3, 4
2, 3, 5
2, 4, 5
Explanation:

ஸ்லேட்டர் ஆய்வு செய்த கிராமங்களில் இரண்டு கிராமங்கள் மட்டும் 21ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதாகும்.
56921.2010 மார்ச் முடிவில் வங்கி இணைப்புத் திட்டத்தின் _____________ சுயஉதவிக் குழுக்கள் கீழ் வங்கிகளில் சேமிப்பு கணக்கை வைத்திருந்தனர்
5.45 மில்லியன்
6.42 மில்லியன்
6.95 மில்லியன்
7.89 மில்லியன்
Explanation:
2009 - 10ஆம் ஆண்டின்படி 1.59 மில்லியன் புதிய சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு திட்டத்தில் கடன் பெறும் வசதியோடு இணைக்கப்பட்டன. மற்றும் வங்கிகள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14,453 கோடி கடனாக வழங்கப்பட்டது.
56922.வேளாண் தொழிலாளர் விசாரணைக்குழு அறிக்கையின் படி _____________ சதவீத வேளாண் தொழிலாளர்கள் குறை வேலையுடைமையில் உள்ளனர்.
75
78
82
84
Explanation:
குறை வேலையுடைமையில் உள்ள வேளாண் தொழிலாளர்கள் சராசரியாக ஆண்டுக்கு 82 நாட்கள் வேலையின்றி உள்ளனர்.
56923.வேலைக்குத் தயாராக இருந்தும் எந்த வேலையும் கிடைக்காமல் வேலையில்லாத நிலையில் இருப்பது ____________ வேலையின்மை எனப்படும்.
மறைமுக வேலையின்மை
வெளிப்படையான வேலையின்மை
பருவகால வேலையின்மை
தொழில்நுட்ப வேலையின்மை
Explanation:
விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஊரக கைவினைஞர்கள் மற்றும் கற்றவர்கள் ஆகியோர் வெளிப்படையான வேலையின்மை வகையை சார்ந்தவர்கள்.
56924.NABARD வங்கியின் கணக்கீட்டின்படி _________________ சுய உதவிக் குழுக்கள் இந்தியாவில் உள்ளன.
1.2 மில்லியன்
2.0 மில்லியன்1
1.8 மில்லியன்
2.2 மில்லியன்
Explanation:
இதில் 33 மில்லியன் உறுப்பினர்கள் வங்கி இணைப்புத் திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற்றுள்ளனர்.
56925.தேவைக்கு அதிகமாக மிகுதியான தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது _____________ வேலையின்மை எனப்படும்.
பருவகால வேலையின்மை
அமைப்பு வேலையின்மை
தொழில்நுட்ப வேலையின்மை
மறைமுக வேலையின்மை
Explanation:

மறைமுக வேலையின்மை என்பது தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டாலும் உற்பத்தியளவு அதிகரிக்காத நிலையை குறிக்கும்.
56926.சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. NABARDன் SHG வங்கி இணைப்பு திட்டத்தின்படி உறுப்பினர்கள் கடனை சரியாக திருப்பி செலுத்திய பதிவை வைத்திருக்கும் சுய உதவிக் குழுக்கள் வங்கியில் கடன் பெற இயலும்.

2. 2005-2006 ஆண்டில் தென் மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளன.

3. இம்மாநிலத்தில் 60% சுய உதவிக் குழுக்கள் வங்கி இணைப்பு கடன் வசதியை பெற்றுள்ளன.
அனைத்தும் சரி
1, 2 சரி
2, 3 சரி
1, 3 சரி
Share with Friends