Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன்

புரட்சிக் கவிஞர், பாவேந்தர், தமிழ்நாட்டின் இரசூல் கம்சதேவ் என்று சிறப்பு பெயர் கொண்ட பாரதிதாசன் புதுவையில் கனகசபை - இலக்குமியம்மாள் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.

நூல்கள்:

  • குடும்ப விளக்கு - மணிமேகலை வெண்பா
  • பாண்டியன் பரிசு - காதல் நினைவுகள்
  • சேரதாண்டவம் - கழைக்கூத்தின் காதல்
  • இருண்ட வீடு - அமைதி
  • தமிழச்சின் கத்தி - செளமியன்
  • பிசிராந்தையார் - நல்ல தீர்ப்பு
  • குறிஞ்சித்திட்டு - தமிழ் இயக்கம்
  • அழகின் சிரிப்பு - காதலா? கடமையா?
  • தமிழியக்கம் - சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
  • இசையமுது - இரண்யன் அல்லது இணையற்ற வீரன்
  • இளைஞர் இலக்கியம் - எதிர்பாராத முத்தம்
  • திருக்குறள் உரை - கண்ணகி புரட்சிக் காவியம்
  • பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனப்பெயர் மாற்றிக் கொண்டார்.
  • இவர் வாழ்ந்த காலம் - 29.04.1891 முதல் 21.04.1964 வரை
  • தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
  • இவர் குயில் என்னும் இதழை நடத்தினார்
  • (இரசூல் கம்சதேவ் உருசிய நாட்டின் மாக்கவிஞர்)
  • நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன் - ரசூல் கம்சதேவ்(ருஷ்யா)
  • தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்.
  • பாரதிதாசன் பரம்பரை என்றொரு கவிஞர் பரம்பரையே இவர்காலத்தில் உருவானது.
  • 16 வயதில் இவர் புதுவை அரசின் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
  • 18 வயதில் அரசு இவருக்கு அரசுக் கல்லூரியில் தமிழாசிரியார் பொறுப்பை வழங்கியது.
  • எ.கா: வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தினம்(சுரதா) என்று தம்மை அழைத்துக்
  • பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு இவரே முதலெழுத்தும் தலையெழுத்தும் ஆவார்.
  • 1920 ஆம் ஆண்டு பழநியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
  • தமிழக அரசினால் ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.
  • திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைத்துச் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.
  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல் - பொதுவுடைமை பற்றியது
  • அழகின் சிரிப்பு - இயற்கையை வர்ணிப்பது
  • குடும்பவிளக்கு - கற்ற பெண்களின் சிறப்பு பற்றியது
  • இருண்ட வீடு - கல்லாத பெண்களைப் பற்றியது
  • எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா
  • பாரதியின் கட்டளைக்கிணங்கப் பாடிய பாடல்.
  • பாரதியார் இப்பாடலை நீசுப்பிரமணிய பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது என்று குறிப்பிட்டு சுதேசமித்திரனுக்கு அனுப்பினார்.
  • பு:அ.பெரியசாமி என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு தேர்ந்தவர்.
  • அறிஞர் அண்ணா 1946 ல் புரட்சிக் கவிஞர் என்னும் பட்டத்தை அளித்தார்.
  • புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர் என பெரியாரால் பாராட்டப்பெற்றவர்.
  • பொன்னி, குயில் போன்ற இதழ்கள் நடத்தினார்.
  • செக் மொழியில் இவரின் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  • பாரதியாரை முதன்முதலில் ஒரு திருமண வீட்டில் சந்தித்தார்.
  • நாடு, மொழி, இனம் சமுதாயச் சீர்திருத்தம் முதலானவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு இவர் இயற்றிய நூல்கள் - இரவா இன்பக்களஞ்சியங்கள் எனப்படுகிறது.
  • செந்தமிழை செழுந்தமிழாக காண ஆவல் கொண்டவர்.
  • சுப்புரத்தினம் ஓர் கவி - பாரதியார்
  • பாரதிதாசன் - தமிழ்க்கவி, தமிழரின் கவி, தமிழின் மறுமலர்ச்சிக்காகத் தோன்றிய கவி.
  • 1990ஆம் ஆண்டு இவருடைய படைப்புகளை தமிழ்நாடு அரசு பொது உடமையாக்கியது.

மேற்கோள்கள் :

  • தொண்டு செய்வாய் தமிழுக்குத்
    துறைதோறுந் துறை தோறுந் துடித்தெழுந்தே
  • தமிழுக்கும் அமுதென்று பேர்
  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
  • தமிழே நீயோர் பூக்காடு நானோர் தும்பி
  • உள்ளே தொட்டால் உசிரில் இனிக்கும் தெள்லுதமிழ்
  • தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி
    வேறென்ன வேண்டும் இனி?
  • எங்கள் பகைவர் எங்கோ மரைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
  • உறுதி! உறுதி! ஒன்றே சமூகம்
    என்று எண்ணார்க்கு இறுதி! இறுதி!
  • புதியதோர் உலகு செய்வோம் கெட்ட
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்
  • இருட்டறையில் உள்ளதடா உலகம்
  • எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான
    இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையகம்
  • கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
    கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்
  • எளிமையினால் ஒரு தமிழன்
    படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும்
    நாணிடவும் வேண்டும்.
  • தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே !!
  • கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!

சிறப்புரைகள் :

  • அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன் - புதுமைப்பித்தன்
  • பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி - கு.ப.ரா
  • அவர்தம் பாடல்களைப் படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான் - அ.சிதம்பரநாத செட்டியார்.
  • தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாதமரம், கூடில்லாத பறவை என்று பாடிய உருசியக் கவிஞர் இரசூல் கம்சதேவ் போலவே பாவேந்தர் பாரதிதாசனும் விளங்குகிறார்.
  • இவர் எழுதிய பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாதெமிப் பரிசு பெற்றது.
  • வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்னும் பாடலை புதுவை அரசு தனது வாழ்த்துப் பாடலாக கொண்டுள்ளது.

Share with Friends