Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாரதியார்

பாரதியார்

வாழ்க்கைக் குறிப்பு:

  • இவரின் இயற்பெயர் = சுப்பிரமணியம்
  • பெற்றோர் = சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள்
  • மனைவி = செல்லம்மாள்
  • காலம் - 11.12.1882-11.09.1921(39 ஆண்டுகள்)

புனைப் பெயர்கள்:

  • காளிதாசன்
  • சக்திதாசன்
  • சாவித்திரி
  • ஓர் உத்தம தேசாபிமானி
  • நித்திய தீரர்
  • ஷெல்லிதாசன்

சிறப்பு பெயர்கள்:

  • புதுக் கவிதையின் முன்னோடி
  • பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
  • சிந்துக்குத் தந்தை(பாவேந்தர்)
  • நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
  • காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
  • தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
  • தேசியக்கவி
  • விடுதலைக்கவி
  • அமரக்கவி
  • முன்னறி புலவன்
  • மகாகவி
  • உலககவி
  • தமிழ்க்கவி
  • மக்கள் கவிஞர்
  • வரகவி

உரைநடை நூல்கள்:

  • ஞானரதம்(தமிழின் முதல் உரைநடை காவியம்)
  • தராசு
  • சந்திரிகையின் கதை
  • மாதர்
  • கலைகள்

கவிதை நூல்கள்:

  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • பாஞ்சாலி சபதம்
  • காட்சி(வசன கவிதை)
  • புதிய ஆத்திச்சூடி
  • பாப்பா பாட்டு
  • பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
  • பாரததேவியின் திருத்தசாங்கம்
  • விநாயகர் நான்மணிமாலை

சிறுகதைகள்:

  • திண்டிம சாஸ்திரி
  • பூலோக ரம்பை
  • ஆறில் ஒரு பங்கு
  • ஸ்வர்ண குமாரி
  • சின்ன சங்கரன் கதை
  • நவதந்திரக்கதைகள்
  • கதைக்கொத்து(சிறுகதை தொகுப்பு)

நாடகம்:
ஜெகசித்திரம்

பொதுவான குறிப்புகள்:

  • எட்டயப்புர சமஸ்தானப் புலவர்கள் "பாரதி" என்ற ம் அளித்தனர்
  • தம்மை "ஷெல்லிதாசன்" என்று அழைத்துக்கொண்டார்
  • தம் பூனூலை கனகலிங்கம் என்ற ஆதிதிராவிடற்கு அளித்தவர்
  • தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்
  • 1905இல் சக்கரவர்த்தினி என்ற இதழ் தொடங்கினார்
  • கர்மயோகி, பாலபாரத் ஆகிய இதழை நடத்தினார்
  • சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்
  • நிவேதிதா தேவியைச் சந்தித்த பின் தீவிரவாதி ஆனார்
  • இவரின் ஞானகுரு - நிவேதிதா தேவி
  • இவரின் அரசியல் குரு = திலகர்
  • பதினான்கு மொழிகள் அறிந்தவர்
  • இவர் தம்பி" என அழைப்பது - பரலி நெல்லையப்பர்
  • பாரதியார் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி நெல்லையப்பர்
  • பாரதியார் பாடல்களை முதலில் வெளியிட்டவர் = கிருஷ்ணசாமி ஐயர்
  • பாரதியின் படத்தை வரைந்தவர் “ஆர்ய என்ற பாஷ்யம்"
  • பாரதிக்கு "மகாகவி" என்ற பட்டம் கொடுத்தவர் வ.ரா(ராமசாமி ஐயங்கார்)
  • பாரதி சங்கத்தை தொடங்கியவர் = கல்கி
  • மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
  • இவரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் = விவேகபானு(1904, தலைப்பு = தனிமை இரக்கம்)
  • இவர் கீதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
  • பதஞ்சலி தத்திரத்திற்கு உரை எழுதி உள்ளார்
  • தாகூரின் சிறுகதைகள் 11ஐத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
  • பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில், `தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொது எனக்கு வருத்தம் உண்டாகிறது. தமிழனை விட மற்றொரு சாதி அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்
  • உரைநடை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, “கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி" என்கிறார் தமிழில் முதன் முதலில் கருத்துப்படங்கள் வெளியிட்டவர் இவரே
  • "புவியனைத்தும் போற்றத் தமிழ்மொழியைப்புகளில் ஏற்ற, கவியரசன் இல்லை என்ற குறை என்னால் தீர்ந்தது; நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று அறிவித்தார்
  • “சுவை புதிது பொருள் புதிது! வளம் புதிது! சொல் புதிது! சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என் கவிதை" என்று சூளுரைத்தார்

சிறப்பு:

  • கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் இவரே
  • பரலி நெல்லையப்பர் = பாரதியார் ஒரு அவதாரப் புருஷர், இவர் நூலைத் தமிழர் வேதமாகக் கொள்வார்களாக
  • நாமக்கல் கவிஞர் = பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும்; இந்தியன் நான் என்றிடும் நல் இறுமாப்பு உண்டாம்
  • கவிமணி = பாட்டுக்கொரு புலவன் பாரதி
  • பாரதியின் சுயசரிதமே தமிழின் முதல் சுயசரிதம்
  • சிற்பி பாலசுப்ரமணியம் - "அவனுக்கு(பாரதி) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டும் தெரியும்; ஜப்பானிய ஹைக்கூ லாவகமும் புரியும். தாகூரையும் அறிவான்; வால்ட் விட்மனின் புதுக்கவிதை ஒளியையும் உணர்வான். காளிதாசனான அவன் ஷெல்லிதாசனாகவும் தன்னை அறிவித்துக் கொண்டவன். சுதந்திரத்தையும் பெண் உரிமையையும் புதுயுகக் கனவுகளையும் நவநவமான மொழிகளில் பேசியவன்" என்கிறார்.
  • அனைவரும் தாய்நாடு எனக் கூற பாரதி மட்டும் தந்தையர் நாடு எனக் கூறியவர்
  • வையாபுரிப்பிள்ளை = இவருடைய பாடல்களில் கருத்தாழமும், ஆற்றலும், எளிமையும், இசை நயமும், தொடர் இன்பமும் ஒருங்கு அமையக் காண்கிறோம். இவ்வளவு சிறந்த கவிஞர் தமிழுலகில் சில நூற்றாண்டுகளாகத் தோன்றவில்லை
  • Dr.H.Cousins = அழகின் தூய - வாய்மையான வடிவத்தை பாரதி கவிதையிலே காண இயலும்

பாரதியை பற்றி பாவேந்தர்:

  • பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
  • செந்தமிழ்த் தேனி
  • சிந்துக்குத் தந்தை
  • குவிக்கும் கவிதைக் குயில்
  • இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
  • காடு கமழும் கற்பூரச் சொற்கோ
  • கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
  • திறம் பாட வந்த மறவன் புதிய
  • அறம் பாட வந்த அறிஞன்
  • என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
  • தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
  • தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
  • பாரதியார் உலககவி - அகத்தில் அன்பும்
  • பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்
  • ஒருர்க்கொரு நாட்டுக்குரியதான
  • ஒட்டைச் சாண் நினைப்புடையார் அல்லர்

மேற்கோள்:

  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணோம்
  • சொல்லில் உயர்வுதமிச் சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா
  • மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
  • ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்
  • உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
  • வாக்கினிலே ஒளி உண்டாம்
  • தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
  • செங்கமிம் நாடென்ற போதினிலே

Share with Friends