Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர்

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற் பெயர் - சூரிய நாராயண சாஸ்திரி.
  • ஊர் - மதுரை அடுத்துள்ள விளாச்சேரி
  • பெற்றோர் - கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மையார்.
  • தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக,1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்..


சிறப்பு பெயர்கள்:

  • தமிழ் நாடக பேராசிரியர்
  • திராவிட சாஸ்திரி(சி.வை.தாமோதரம்பிள்ளை)
  • தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்


படைப்புகள்:

  • ரூபாவதி அல்லது காணாமல் போன மகள்(நாடக நூல்)
  • கலாவதி(நாடக நூல்)
  • மானவிசயம்(நாடக நூல், களவழி நாற்பது தழுவல்)
  • பாவலர் விருந்து
  • தனிப்பாசுரத் தொகை
  • தமிழ் மொழி வரலாறு
  • நாடகவியல்(நாடக இலக்கண நூல்)
  • சித்திரக்கவி
  • மதிவாணன்(புதினம்)
  • உயர்தனிச் செம்மொழி(கட்டுரை)
  • சூர்பநகை(புராண நாடகம்)
  • முத்ராராட்சசம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்
  • தமிழ் புலவர் சரித்திரம்
  • தமிழ் வியாசகங்கள்(கட்டுரை தொகுப்பு)


இதழ்:

  • ஞானபோதினி
  • விவேக சிந்தாமணி


குறிப்பு:

  • சென்னை கிறித்துவக் கல்லோர்ரியில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
  • மறைமலை அடிகளின் ஆசிரியர்
  • சோனட் என்ற 14 அடி ஆங்கிலப் பாட்டைப் போன்று பல பாடல்கள் எழுதி "தனிப்பாசுரத்தொகை" என்னும் நூலை வெளியிட்டார்
  • "அங்கம்" என்ற நாடக வகைக்கு மானவிசயம் என்ற நாடக நூலை படைத்தார்
  • சி.வை.தாமோதரப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க "மதிவாணன்" என்ற புதினம் படைத்தார்


சிறப்பு:

  • சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரை தனிப்ப்பசுரத் தொகை என்னும் நூலை வெளியிடும் போது பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார்
  • இவரின் தனிப்பாசுரத் தொகை என்னும் நூலினை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
  • இவரின் தமிழ்ப்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு சி.வை.தாமோதரம்பிள்ளை இவருக்கு "திராவிட சாஸ்திரி" என்ற பட்டம் வழங்கினார்.
  • உயர்தனிச் செம்மொழி(classical language), தகுந்தவை தங்கி நிற்றல்(survival of the fittest) என்ற கலைச் சொற்களைப் படைத்தவர்
  • முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என அறிவித்தவர்


Share with Friends