Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2016 Page: 4
33261.பெருமை + களிறு=பெருங்களிறு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு
ஈறு போதல், இடையுகரம் இய்யாதல்
ஈறு போதல், அடியகரம் ஐயாதல்
ஈறு போதல், ஆதி நீடல், முன்நின்ற மெய் திரிதல்
ஈறு போதல், இனமிகல்
33262."நல்லொழுக்கம் ஒன்றே - பெண்ணே
நல்ல நிலை சேர்க்கும்
புல்லொழுக்கம் தீமை - பெண்னே
பொய்யுரைத்தல் தீமை"
- இப்பாடலில் உள்ள விளிச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஒன்றே
பெண்ணே
சேர்க்கும்
தீமை
33263."சேர்" என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்
சேர்ந்து
சேர்ந்த
சேர்க
சேர்ந்தது
33264.கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
ஏரெழுபது
அபிராமி அந்தாதி
சரசுவதி அந்தாதி
திருக்கை வழக்கம்
33265.பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) ஏற்றப்பாட்டு1. ஒருவகை மீன்
(b) நாரை2. நீர்நிலை
(c) குறவை3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு
(d) குளம்4. கொக்கு வகை
2 3 4 1
2 1 4 3
3 4 1 2
3 1 4 2
33266.கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.
"ஊழி பெயரினும் தாம்பெயரார் ____________
___________________"
சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்
தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்
பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு
சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்
33267."நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
நாலாயிர திவ்வியபிரபந்தம், இருபா இருபஃது
இன்னா நாற்பது, இனியவை நாற்பது
நாலடியார், திருக்குறள்
அகநானூறு, புறநானூறு
33268.சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்
சுரதாவின் கவிதைகள்
துறைமுகம்
தேன்மழை
சுவரும் சுண்ணாம்பும்
33269.ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்
மறைமலையடிகள்
பரிதிமாற் கலைஞர்
சுந்தரம் பிள்ளை
திரு.வி.க
33270.ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?
தூது
உலா
பள்ளு
அந்தாதி
33271."சின்னச்சீறா" என்ற நூலை எழுதியவர்
பனு அகமது மரைக்காயர்
உமறுப்புலவர்
அப்துல் ரகுமான்
சேக் மீரான்
33272."அழுது அடியடைந்த அன்பர்" எனக் குறிப்பிடப் பெறுபவர்
சுந்தரமூர்த்தி
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
33273.உரிய சொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார்___________
திறனறிந்து தேர்ந்து கொளல்
கேண்மை
நன்மை
வன்மை
தகைமை
33274.கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
"பொல்லாக்காட்சி" என்பதன் பொருள், "மாயத்தோற்றம்" என்பது
"வெகுளல்" என்பதன் பொருள், "சினத்தல்" என்பது
"வெஃகல்" என்பதன் பொருள் "விரும்புதல்" என்பது
"குறளை" என்பதன் பொருள் "புறம்பேசுதல்" என்பது
33275.பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) திருச்சிற்றம்பலம்1. வேதாரணியம்
(b) திருமுதுகுன்றம்2. கும்பகோணம்
(c) திருமறைக்காடு3. சிதம்பரம்
(d) குட மூக்கு4. விருத்தாசலம்
2 3 4 1
2 1 4 3
3 4 1 2
3 1 4 2
33276.கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க
I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் கருக்கமே திரு.வி.க. என்பது
II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் தண்டலம் என்றழைக்கப்படுகிறது
III.மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்
IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப்படுகிறார்
I மற்றும் IV பொருத்தமற்றவை
II மற்றும் IV பொருத்தமற்றவை
IV மற்றும் III பொருத்தமற்றவை
II மற்றும் III பொருத்தமற்றவை
33277.பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?
பஃறி
திமில்
ஓடை
வங்கம்
33278.கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக
பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்
பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிசு பெற்றவர்
பாரதிதாசன் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவர்
பாரதிதாசன் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியவர்
33279.பொருத்துக
(a) இமயம்1. சந்தனம்
(b) குடகு2. பவளம்
(c) கொற்கை3. மணிகள்
(d) கீழ்க்கடல்4. முத்து
2 3 4 1
2 1 4 3
3 4 1 2
3 1 4 2
33280.பொருந்தா இணையைக் கண்டறிக
பரவை-கடல்
கரி - நரி
பரி-குதிரை
கணை-அம்பு
Share with Friends