Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2015 Page: 2
33532.திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
l. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், "மேலகரம்" என்னும் ஊரில் பிறந்தவர்
II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், குற்றாலக் குறவஞ்சியின் மையக் கதைப்பொருள் ஆகும்
III. குறவஞ்சி தொண்ணுறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று
IV. "வசந்தவல்லி திருமணம்" எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது
I மற்றும் II சரியானவை
III மற்றும் IV சரியானவை
II மற்றும் III சரியானவை
I மற்றும் IV சரியானவை
33533."மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்"- இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
கம்பர்
குமரகுருபரர்
ஒட்டக்கூத்தர்
33534.ஒற்றுமை காப்பியம் என்னும் அடைமொழியல் குறிகப்பெறும் நூல்
பெரிய புராணம்
மணிமேகலை
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
33535.அம்மானைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I.அம்மானை என்பது மகளிர் விளையாட்டு வகைகளுள் ஒன்று
II. அம்மானை ஆடும்போது மகளிர் பாடும் பாட்டுக்கு அம்மானை வரி என்பது பெயர்
III.பாடிக் கொண்டே பந்துகளை உருட்டி விளையாடுவது பந்து விளையாடல் ஆகும்
IV. அம்மானைப் பாடலில் ஒரு கருத்து வினா எழுப்பி அக்கருத்தை மறுத்தல், இரண்டுக்கும் பொருந்தும் வகையில் ஒரு செய்தி, முடிவில் ஒரு நீதி இடம்பெறும் .
I மற்றும் III
II மற்றும் I
III மற்றும் IV
IV மற்றும் II
33536.கடற் பயணத்தின் சிறப்பை - அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
(a) விளைந்துமுதிர்ந்த விழுமுத்து1. பட்டினப்பாலை
(b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி2. புறநானூறு
(c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர்3. மதுரைக் காஞ்சி
(d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது4. அகநானூறு

(а) (b) (c) (d)
4 3 2 1
3 4 2 1
1 2 3 4
3 4 1 2
33537.புனையா ஓவியம் என்பதன் பொருள்
வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்
பூக்களால் வரைவது
மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்
கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது
33538.கிருஷ்ணகிரி, கோத்தகிரி-இதில் காணப்படும் கிரி எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
கல்லிடைக் குறிச்சி
பாறை
மலை
கோட்டை
33539.திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் திருவிளையாடல் புராணம்
திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்
திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது
திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன
I மற்றும் III சரியானவை
II மற்றும் III சரியானவை
III மற்றும் IV சரியானவை
I மற்றும் IV சரியானவை
33540.பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: .
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது1. தண்டியலங்கார மேற்கோள்
(b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே2. கிரெளல்
(c) தன்னேரில்லாத தமிழ்3. கால்டுவெல்
(d) தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது4. தொல்காப்பியம்

(a) (b) (c) (d)
4 3 2 1
3 4 2 1
3 4 1 2
1 2 3 4
33541.பொருத்துக:
நூல்ஆசிரியர்
(a) சிறுபாணாற்றுப்படை1. முடத்தாமக்கண்ணியார்
(b) திருமுருகாற்றுப்படை2. நல்லூர் நத்தத்தனார்
(c) பொருநராற்றுப்படை3. கடியலூர் உருத்திரங் கண்ணனார்
(d) பெரும்பாணாற்றுப்படை4. நக்கீரர்

(a) (b) (c) (d)
4 3 2 1
2 4 1 3
3 4 1 2
1 2 3 4
33542.வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
(a) Internet1.மின் இதழ்
(b) Search Engine2. மின் நூல்
(c) E. Journal3. இணையம்
(d) E-Book4. தேடுபொறி
4 3 2 1
2 4 1 3
3 4 1 2
1 2 3 4
33543.கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்
தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும்
ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்
பராபரக்கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை
33544.பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் Iபட்டியல் II
அகநானூற்றின் பாட்டு வைப்பு முறைதிணை
(a) 10, 20,30,40...1. முல்லைத் திணை
(b) 6, 16, 26, 36...2. நெய்தல் திணை
(c) 4, 14, 24, 34...3. குறிஞ்சித் திணை
(d) 2, 8, 12, 18...4. மருதத் திணை

(a) (b) (c) (d)
4 3 2 1
1 2 3 4
3 4 1 2
2 4 1 3
33545.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
(a) ഖலை1.பொந்து
(b) வளை2. மீன்வகை
(c) வாளை3. மரவகை
(d) வாழை4. மீன்பிடி வலை
4 3 2 1
1 2 3 4
3 4 1 2
2 4 1 3
33546.கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?
I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்
I, II சரியானவை
I, III சரியானவை
III, IV சரியானவை
I, IV சரியானவை
33547.நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?
பனூ அகமது மரைக்காயர்
சீதக்காதி
உமறு புலவர்
செய்கு அப்துல் காதிர் மரைக்காயர்
33548.பொருந்தா ஒன்றைத் தோக
முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ
சின்னப்பலேசின்னப்பலே சேதி கேடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
33549.இராசராச சோழனுலாவைப் பாடியவர்
ஒட்டக்கூத்தர்
புகழேந்திப் புலவர்
காளமேகப் புலவர்
குமரகுருபரர்
33550.பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) மாணிக்கவாசகர்1. திருத்தொண்டத்தொகை
(b) ஆண்டாள்2. தாண்டகவேந்தர்
(c) சுந்தரர்3. திருக்கோவை
(d) திருநாவுக்கரசர்4. நாச்சியார் திருமொழி

(a) (b) (c) (d)
3 4 1 2
1 2 3 4
4 3 2 1
2 4 1 3
33551."முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று கூறியவர்?
தொல்காப்பியர்
பவணந்தி முனிவர்
தண்டியடிகள்
புலவர் குழந்தை
Share with Friends