Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2014 Page: 4
32961.He is a Prince among the Tamil Poets (தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர்
பாராட்டிய புலவர்
இளங்கோவடிகள்
கம்பர்
பாரதியார்
திருத்தக்க தேவர்
32962.திருவாசகம் யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?
ரேணியஸ்
ஜி.யு.போப்
எல்லீசர்
லாசரஸ்
32963.இரகசிய வழி எனும் ஆங்கில நூலை தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?
பம்மல் சம்பந்த முதலியார்
சங்கரதாஸ் சுவாமிகள்
சுந்தரம் பிள்ளை
இலட்சுமண பிள்ளை
32964.பொருத்துக:


நூல் ஆசிரியர் பெயர்
(a) திரிகடுகம் 1.விளம்பிநாகனார்
(b) சிறுபஞ்சமூலம் 2.கணிமேதாவியார்
(c) ஏலாதி 3.நல்லாதனார்
(d) நான்மணிக்கடிகை 4.காரியாசான்

1 4 2 3
3 2 1 4
3 4 2 1
4 1 3 2
32965.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
ஆடும் மயிலின் அழகுதான் என்னே!
வினா வாக்கியம்
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
செய்தி வாக்கியம்
32966.இணையாக இல்லாததை எழுதுக:
பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சி - செய்திப் படம்
ஒரு நிகழ்வை மட்டும் விளக்குவது - விளக்கப் படம்
கருத்துக்கணிப்பு செய்யப்படுவது - கருத்துப் படம்
கல்வி கற்பிப்பதற்கென உருவானது - கல்விப் படம்
32967.வாக்கிய வகையைக் கண்டெழுதுதல் :
குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது
செய்வினை வாக்கியம்
கட்டளை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
செயப்பாட்டுவினை வாக்கியம்
32968.திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும்
- எவ்வகை வாக்கியம்
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
வினா வாக்கியம்
வியப்பு வாக்கியம்
32969.Pilgrims Progress என்னும் நூலினைத் தழுவி எழுதிய தமிழ் நூல் எது?
மனோன்மணியம்
தேம்பாவணி
சீறாப்புராணம்
இரட்சணிய யாத்திரிகம்
32970.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இந்நூலுக்குச் சொந்தமானவர்
கா.சு.பிள்ளை
ரா.பி. சேதுப்பிள்ளை
தேவநேய பாவாணர்
கால்டுவெல்
32971."பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே"
எனும் பாடலடிகள் யாருடையது?
புரட்சிக்கவிஞர்
தேசியக்கவி
காந்தியக் கவிஞர்
கவிமணி
32972."திரைகடல் ஒடியும் திரவியம் தேடு"
இக்கூற்றுக்குரியவர் யார்?
கம்பர்
கணியன் பூங்குன்றனார்
ஒளவையார்
இளங்கோவடிகள்
32973.அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக
எழிலி, எழில், எழால், எழல்
எழில், எழல், எழால், எழிலி
எழால், எழில், எழிலி எழல்
எழல் எழால், எழிலி, எழில்
32974.TROLLY - என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க?
படப்பிடிப்பு
உருப்பெருக்கி
நகர்த்தும் வண்டி
எதிர்ச்சுருள்
32975.பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
தேம்பாவணி
கித்தேரி அம்மாள் அம்மானை
செந்தமிழ் இலக்கணம்
ஆசாரக் கோவை
32976.துறவை மேல் நெறி என்று உச்சத்தில் வைத்துப் படைக்கப்பட்டவை எவை?
சங்க இலக்கியங்கள்
அற இலக்கியங்கள்
பக்தி இலக்கியங்கள்
காப்பியங்கள்
32977.சங்கம் மருவிய கால நூல்களைக் கீழ்க்கணக்கு எனக் கூறும் பாட்டியல் நூல் எது?
சிதம்பரப் பாட்டியல்
நவநீதப் பாட்டியல்
பன்னிரு பாட்டியல்
சுவாமிநாதப் பாட்டியல்
32978."ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து"
- எனும் குறளில் வள்ளுவர் எடுத்தாளும் உவமை எது?
ஆட்டுக்கடா
வேங்கை
குதிரை
நாய்
32979."உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்றவர்
இராமலிங்க அடிகளார்
தாயுமானவர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
32980.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
(a) இகல் 1. செல்வம்
(b) திரு 2. ஆட்டுக்கடா
(c) பொருதகர் 3. துன்பம்
(d) இடும்பை 4. பகை

4 1 2 3
2 4 3 1
1 2 3 4
4 2 1 3
Share with Friends