ஈரோடு தமிழன்பன்
வாழ்க்கை குறிப்பு
- இயற்பெயர்: ஜெகதீசன்
- பெற்றோர்: நடராஜன் -வள்ளியம்மாள்
- புனைப்பெயர்: விடிவெள்ளி
- ஊர்: சென்னிமலை (ஈரோடு மாவட்டம்)
- பிறப்பு : 28 – 09 – 1940
ஆசிரியர் குறிப்பு:
- 1.மரபுக் கவிதை எழுதி புதுக்கவிதைக்கு வந்த தமிழ் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.
- 2.“அரிமா நோக்கு என்ற ஆய்வு இதழின்” ஆசிரியர் தமிழன்பன் ஆவார்.
- 3.இவர் “பாரதிதாசன் பரம்பரை கவிஞர்”.
பணி:
- 1.சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
- 2.தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
- 3.தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
- 4.தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் phd பட்டம் பெற்றவர்.
- 5.சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சிறப்பு:
- 1.ஈரோடு தமிழன்பன் தமிழக கவிஞர், ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்க கவிஞர், புதுக்கவிதை கவிஞர், சிறுகதை ஆசிரியர் , புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கிய படைப்பாளி, வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முக ஆளுமைகளை கொண்டவர்.
- 2.இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
- 3.ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனும் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை கொடுத்துள்ளார்.
சிறப்பு பெயர்:
- 1.மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர்.
- 2.வானம்பாடி கவிஞர்
- 3.ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்க கவிஞர்
விருது:
- 1.“வணக்கம் வள்ளுவ” எனும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகடமி விருது 2004ஆம் ஆண்டில் பெற்றார்.
- 2.தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
நூல்கள்:
- 1. தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)
- 2. சூரிய பிறை
- 3. வணக்கம் வள்ளுவ
- 4. ஒரு வண்டி சென்ரியு
- 5. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
- 6. நிலா வரும் நேரம்
- 7. தீவுகள் கரையேறுகின்றன
- 8. காலத்திற்கு ஒரு நாள் முந்தி
- 9. தோணி வருகிறது (முதல் கவிதை நூல்)
- 10. சிலிர்ப்புகள்
- 11. விடியல் விழுதுகள்
- 12.தமிழோவியம்
- 13. திரும்பி வந்த தேர்வலம்
- 14. மின்மினி காடுகள்
- 15. சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
- 16. பொதுவுடமை பூபாளம்
- 17. ஊமை வெயில்
மேற்கோள்:
'தமிழோவியம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை
காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!
அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்
நிகரிலாக் காப்பியப் பூவனங்கள்- உன்
நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!
இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார்.