Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன்

வாழ்க்கை குறிப்பு

  • இயற்பெயர்: ஜெகதீசன்
  • பெற்றோர்: நடராஜன் -வள்ளியம்மாள்
  • புனைப்பெயர்: விடிவெள்ளி
  • ஊர்: சென்னிமலை (ஈரோடு மாவட்டம்)
  • பிறப்பு : 28 – 09 – 1940

ஆசிரியர் குறிப்பு:

  • 1.மரபுக் கவிதை எழுதி புதுக்கவிதைக்கு வந்த தமிழ் பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் ஆவார்.
  • 2.“அரிமா நோக்கு என்ற ஆய்வு இதழின்” ஆசிரியர் தமிழன்பன் ஆவார்.
  • 3.இவர் “பாரதிதாசன் பரம்பரை கவிஞர்”.

பணி:

  • 1.சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
  • 2.தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • 3.தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
  • 4.தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு என்ற ஆராய்ச்சிக்காக முனைவர் phd பட்டம் பெற்றவர்.
  • 5.சென்னை புதுக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சிறப்பு:

  • 1.ஈரோடு தமிழன்பன் தமிழக கவிஞர், ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்க கவிஞர், புதுக்கவிதை கவிஞர், சிறுகதை ஆசிரியர் , புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கிய படைப்பாளி, வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குனர், திரைப்பட பாடலாசிரியர் என பன்முக ஆளுமைகளை கொண்டவர்.
  • 2.இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
  • 3.ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ எனும் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை கொடுத்துள்ளார்.

சிறப்பு பெயர்:

  • 1.மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர்.
  • 2.வானம்பாடி கவிஞர்
  • 3.ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்க கவிஞர்

விருது:

  • 1.“வணக்கம் வள்ளுவ” எனும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகடமி விருது 2004ஆம் ஆண்டில் பெற்றார்.
  • 2.தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.

நூல்கள்:

  • 1. தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்)
  • 2. சூரிய பிறை
  • 3. வணக்கம் வள்ளுவ
  • 4. ஒரு வண்டி சென்ரியு
  • 5. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
  • 6. நிலா வரும் நேரம்
  • 7. தீவுகள் கரையேறுகின்றன
  • 8. காலத்திற்கு ஒரு நாள் முந்தி
  • 9. தோணி வருகிறது (முதல் கவிதை நூல்)
  • 10. சிலிர்ப்புகள்
  • 11. விடியல் விழுதுகள்
  • 12.தமிழோவியம்
  • 13. திரும்பி வந்த தேர்வலம்
  • 14. மின்மினி காடுகள்
  • 15. சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
  • 16. பொதுவுடமை பூபாளம்
  • 17. ஊமை வெயில்

மேற்கோள்:

'தமிழோவியம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை

காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!

அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை

அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்

நிகரிலாக் காப்பியப் பூவனங்கள்- உன்

நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்!

இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் "ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Share with Friends