மு.மேத்தா
குறிப்பு:
- இயற்பெயர் = முகமது மேத்தா
- ஊர் = பெரியகுளம்
- பிறப்பு – 05.09.1945
- சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் .
- ‘வானம்பாடி’ எனும் புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகமானார் .
- ‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ எனும் கவிதை , இவருக்கு புகழ் தேடித்தந்த கவிதை ஆகும் .
- ‘சோழநிலா’ எனும் வரலாற்று நாவல் , ஆனந்தவிகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கிய போட்டியில் முதல் பரிசை வென்றது .
- இவர் எழுதிய ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூல் , தமிழக அரசின் பரிசைப் பெற்றது.
- "ஆகாயத்தில் அடுத்தவீடு" எனும் கவிதை நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது
- தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் விருதும் பெற்றுள்ளார் .
கவிதை நூல்கள்:
- கண்ணீர்ப்பூக்கள்
- ஊர்வலம்(தமிழக அரசு பரிசு)
- அவர்கள் வருகிறார்கள்
- நடந்த நாடகங்கள்
- காத்திருந்த காற்று
- திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
- இதயத்தில் நாற்காலி
- ஒருவானம் இரு சிறகு
- மனச்சிறகு
- நனைத்தவன நாட்கள்
- ஆகாயத்தில் அடுத்த வீடு(சாகித்ய அகாடமி விருது)
- நாயகம் ஒரு காவியம்
- காற்றை மிரட்டிய சருகுகள்
நாவல்:
- சோழ நிலா
சிறுகதை;
- மகுடநிலா
- அவளும் நட்சதிரம் தான்
கதைக் கவிதை:
- வெளிச்சம் வெளியே இல்லை
கட்டுரை:
- நாணும் என் கவிதையும்
உரைநடை:
- மேத்தாவின் முன்னுரைகள்
- நினைத்தது நெகிழ்ந்தது
- ஆங்காங்கே அம்புகள்
கவியரங்கக் கவிதை:
- முகத்துக்கு முகம்
மேற்கோள்கள்
நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை"