Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை சி.மணி

ஆசிரியர் குறிப்பு : சி.மணி (1936 - 2009)

இயற்பெயர்:சி.பழனிச்சாமி
பிறந்த இடம்:சேலம்
காலம்:பிறப்பு 1936 – இறப்பு 2009

  • இவர் ஒரு ஆங்கிலப் பேராசரியர்
  • 1959 ஆம் ஆண்டு முதல், “எழுத்து” இதழில் இவரின் கவிதைகள வெளிவந்தன
  • இவர் நடத்திய சிற்றிதழ் - "நடை"
  • தமிழ் நவீன கவிதையில் "அங்கதம்" என்பது சி. மணியால் கொண்டுவரப்பட்டது. (அங்கதம் என்பதன் பொருள் "நையாண்டி" எனப்படும்.)
  • “இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாய் சொன்னவர்”

விருதுகள்

  • இருமுறை (1983 & 1985) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் விருது பெற்றுள்ளார்.
  • 2002 -ம் ஆண்டு தமிழ் இலக்கிய உலகில், மிகப் பெரிய கௌரவ விருதாக கருதப்படும் "விளக்கு விருது" பெற்றார்.
  • ஆசான் கவிதை விருது & கவிஞர் சிற்பி விருதும் பெற்றுள்ளார்

புனைப் பெயர்

  • தாண்டவராயன்
  • வே.மாலி
  • கே.செல்வம்
  • ஓலூலூ
  • பெரியசாமி
  • ப.சாமி
  • தான்டவநாயகம்

கவிதைத் தொகுப்புகள்

  • வரும் போகும் – 1974
  • சாதனா – 1975
  • ஒளிச்சேர்க்கை – 1976
  • சாரல் – 1976
  • இதுவரை – 1996

கவிதைகள்

  • நகரம்
  • பச்சையின் நிலவுப் பெண்
  • நாட்டியக்காளை
  • உயர்குடி
  • அலைவு
  • குகை
  • தீர்வு
  • முகமூடி
  • பழக்கம்
  • பாரி

ஆய்வு நூல்

  • யாப்பும் கவிதையும் (தமிழில் புதுகவிதை பற்றிய முதல் ஆய்வு நூல்)

மொழி பெயர்ப்பு நூல்

  • “தாவோ தி ஜிங்” என்னும் சீன மெய்யியல் நூல்
Share with Friends