Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி

வாழ்க்கைக்குறிப்பு:

  • இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்
  • புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி
  • ஊர் = தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
  • தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர்.
  • எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
  • காலம் = 15.08.1900 – 04.12.1976
  • புதுக்கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)

சிறப்பு பெயர்கள்:

  • சிறுகதையின் சாதனை
  • புதுக்கவிதையின் முன்னோடி
  • தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
  • புதுக்கவிதையின் முதல்வர்
  • புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி

புனைப் பெயர்:

  • ரேவதி
  • பிச்சு
  • ந.பி

சிறுகதைகள்:

  • பதினெட்டாம் பெருக்கு
  • நல்ல வீடு
  • அவனும் அவளும்
  • ஜம்பரும் வேட்டியும்
  • மாயமான்
  • ஈஸ்வர லீலை
  • மாங்காய்த் தலை
  • மோகினி
  • முள்ளும் ரோசாவும்
  • கொலுப்பொம்மை
  • ஒரு நாள்
  • கலையும் பெண்ணும்
  • இரும்பும் புரட்சியும்
  • பாம்பின் கோபம்
  • விஞ்ஞானத்திற்குப் பலி(முதல் சிறுகதை)
  • இரட்டை விளக்கு

புதுக்கவிதை:

  • கிளிக்குஞ்சு
  • பூக்காரி
  • வழித்துணை
  • கிளிக்கூண்டு
  • காட்டுவாத்து
  • புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
  • காதல்(இவரின் முதல் கவிதை)
  • உயிர்மகள்(காவியம்)
  • ஆத்தூரான் மூட்டை

மேற்கோள்:

  • 1934-ல் ஒளியின் அழைப்பு என்ற கவிதையின் நான்காம் பகுதியில் இவ்வாறு எழுதியுள்ளார்.
  • ஜீவா! விழியை உயர்த்து
  • சூழ்வின் இருள் என்ன செய்யும்?
  • அமுதத்தை நம்பு
  • ஒளியை நாடு
  • கமுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்
  • சூழ்வின் இருள் என்ன செய்யும்?


Share with Friends