ந.பிச்சமூர்த்தி
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற்பெயர் = ந. வேங்கட மகாலிங்கம்
- புனைபெயர் = ந. பிச்சமூர்த்தி
- ஊர் = தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
- தொழில் = 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர்.
- எழுத்துப்பணி = கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
- காலம் = 15.08.1900 – 04.12.1976
- புதுக்கவிதையின் இரட்டையர்கள் = பிச்சமூர்த்தி, கு.ப.இராசகோபாலன்(கூறுயவர் = வல்லிக்கண்ணன்)
சிறப்பு பெயர்கள்:
- சிறுகதையின் சாதனை
- புதுக்கவிதையின் முன்னோடி
- தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் தோற்றுநர்
- புதுக்கவிதையின் முதல்வர்
- புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி
புனைப் பெயர்:
- ரேவதி
- பிச்சு
- ந.பி
சிறுகதைகள்:
- பதினெட்டாம் பெருக்கு
- நல்ல வீடு
- அவனும் அவளும்
- ஜம்பரும் வேட்டியும்
- மாயமான்
- ஈஸ்வர லீலை
- மாங்காய்த் தலை
- மோகினி
- முள்ளும் ரோசாவும்
- கொலுப்பொம்மை
- ஒரு நாள்
- கலையும் பெண்ணும்
- இரும்பும் புரட்சியும்
- பாம்பின் கோபம்
- விஞ்ஞானத்திற்குப் பலி(முதல் சிறுகதை)
- இரட்டை விளக்கு
புதுக்கவிதை:
- கிளிக்குஞ்சு
- பூக்காரி
- வழித்துணை
- கிளிக்கூண்டு
- காட்டுவாத்து
- புதுக்குரல்கள்(தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதி)
- காதல்(இவரின் முதல் கவிதை)
- உயிர்மகள்(காவியம்)
- ஆத்தூரான் மூட்டை
மேற்கோள்:
- 1934-ல் ஒளியின் அழைப்பு என்ற கவிதையின் நான்காம் பகுதியில் இவ்வாறு எழுதியுள்ளார்.
- ஜீவா! விழியை உயர்த்து
- சூழ்வின் இருள் என்ன செய்யும்?
- அமுதத்தை நம்பு
- ஒளியை நாடு
- கமுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்
- சூழ்வின் இருள் என்ன செய்யும்?