வாழ்க்கை குறிப்பு:
- இயற்பெயர் – சிவராமலிங்கம்
- ஊர் : திரிகோணமலை - இலங்கை
- புனைப்பெயர் :பானுசந்திரன், அரூப்சிவராம், பிரமிள்,படிமக் கவிஞர்,ஆன்மீக கவிஞர்
- காலம் : பிறப்பு – 20.04.1939 , மறைவு – 06.01.1997
ஆசிரியர் குறிப்பு
- இவர் “எழுத்து” எனும் சி. சு. செல்லப்பாவின் பத்திரிக்கைகளில் முதன்முதலில் கவிதைகளையும் விமர்சனங்களையும் எழுத ஆரம்பித்தார்.
- மௌனியின் கதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதி உள்ளார்.
- "கவிதை கோட்பாடுகளும் பாரதி கலையும் "என்ற தலைப்பில் பாரதியை பற்றி கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.
கல்வி:
இவர் ராமகிருஷ்ண மடம் நடத்திய இரவு பாடசாலையில் ஆரம்ப கால கல்வி மட்டும் படித்தார்.
சிறப்பு:
- தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர் என்ற பல்வேறு வகையில் இவரை அழைக்கப்படுகின்றனர்.
- 1971 இல் “கண்டி பிரான்சு நட்புறவு” கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.
- களிமண் சிற்பங்கள் செய்வதில் சிறந்தவராக தருமு சிவராமு விளங்கினார்.
- அடிக்கடித் தன் பெயரை மாற்றி புதுப்பித்து கொண்டிருப்பவர் தருமு சிவராம்.
கவிதை நூல்கள்:
- கண்ணாடியுள்ளிருந்து
- கைப்பிடியளவு கடல்
- மேல்நோக்கிய பயணம்
- பிரமிள் கவிதைகள்
- விடிவு
சிறுகதை:
- லங்காபுரிராஜா
- பிரமிள் படைப்புகள்
நாவல்:
- ஆயி
- பிரசன்னம்
உரைநடை:
- மார்க்சும் மார்க்சீயமும்
புகழுரை:
“தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும்”. “பிரமிள் விசித்திரமான படிமவாதி” மற்றும் "உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்" என்று “சி.சு.செல்லப்பாவாலும்” பாராட்டப்பட்டவர்.
விருதுகள் :
- நியூயார்க் விளக்கு அமைப்பு “புதுமைப்பித்தன்” விருதை இவருக்கு அளித்தது.
- கும்பகோணம் சிலிக்குயில் “புதுமைப்பித்தன் வீறு” வழங்கியது.
மேற்கோள்:
`காவியம்' என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பிரமிளின் இந்தக் கவிதை
- 'சிறகிலிருந்து பிரிந்த
- இறகு ஒன்று
- காற்றின்
- தீராத பக்கங்களில்
- ஒரு பறவையின் வாழ்வை
- எழுதிச் செல்கிறது!'