சிற்பி
வாழ்க்கை குறிப்பு :
- இயற்பெயர்: நடராச பாலசுப்ரமணிய சேது ராமசாமி
- ஊர்: ஆத்துப்பொள்ளாச்சி (கோவை மாவட்டம்)
- பெற்றோர்: பொன்னுசாமி கவுண்டர் - கண்டியம்மாள்
- பிறப்பு : 29 – 07 – 1936
ஆசிரியர் குறிப்பு
சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் என பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.
கல்வி
- கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
- 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார்.
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ (தமிழ் இலக்கியம்) கற்றார்.
பணி:
- 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக(Lecturer) பணியாற்றினார்.
- 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
சிறப்பு:
லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவலை “அக்னிசாட்சி” எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
‘வானம்பாடிக்’ காலம்:
- 'வானம்பாடி' தமிழகத்தில் இருந்து வெளிவந்த ஒரு கவிதைச் சிற்றிதழ் ஆகும்.
- வானம்பாடிக் கவிதைகள் சமூகப்பொறுப்பை வலியுறுத்தும் இயக்கம்.
- புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொண்டான், தமிழ்நாடன்,சக்திக்கனல், மு.மேத்தா,ஈரோடு தமிழன்பன், ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்.
கவிதைத் நூல்கள்
- நிலவுப்பூ (1963)
- ஒளிப்பறவை (1971)
- புன்னகை பூக்கும் பூனைகள் (1982)
- சூரிய நிழல் (1990)
- ஒரு கிராமத்து நதி (1998)
- பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு (2001)
- தேவயாணி (2006)
- கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு)
- சிரித்த முத்துக்கள் (1966)
- சர்ப்ப யாகம் (1976)
- மெளன மயக்கங்கள் (1982)
- இறகு (1996)
- பூஞ்யங்களின் சங்கிலி (1999)
- மூடுபனி (2003)
- நீலக்குருவி (2012)
- ஆதிரை (1992) (கவிதை நாடகம்)
உரைநடை நூல்கள்:
- 1. மகாகவி
- 2. இலக்கிய சிந்தனைகள்
- 3. மலையாளக் கவிதை
- 4. சிற்பியின் கட்டுரைகள்
- 5. படைப்பும் பார்வையும்
- 6. புதிர் எதிர்காலம்
- 7. மனம் புகும் சொற்கள்
- 8. கவிதை நேரங்கள்
- 9. காற்று வரைந்த ஓவியம்
- 10. மின்னல் கீற்று
- 11. நேற்றுப் பெய்த மழை
- 12. அலையும் சுவடும்
- 13. இல்லறம் நல்லறம்
சிறுவர் நூல்கள்:
- 1. சிற்பி தரும் ஆத்திசூடி
- 2. வண்ணப்பூக்கள்
வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- 1. ராமானுஜர் வரலாறு
- 2. ம.ப.பெரியசாமி தூரன்
- 3. பாரத ரத்னா சி. சுப்பிரமணியம்
- 4. ஆர்.சண்முகசுந்தரம்
- 5. சே.பா.நரசிம்மலு நாயுடு
- 6. மகாகவி பாரதியார்
- 7. நம்மாழ்வார்
- 8. தொண்டில் கனிந்த தூரன்
மொழிபெயர்ப்பு நூல்கள்:
- 1. சச்சிதானந்தன் கவிதைகள்
- 2. கவிதை மீண்டும் வரும்
- 3. காலத்தை உறங்க விடமாட்டேன்
- 4. கே.ஜி சங்கரப்பிள்ளை கவிதைகள்
பரிசு மற்றும் விருது :
- படைப்பு இலக்கியத்திற்காகவும் (2003), மொழிபெயர்ப்பிற்க்காவும் (2001) இருமுறை சாகித்திய அகாதமி விருது.
- தமிழக அரசின் பாவேந்தர் விருது.
- குன்றக்குடி ஆதீனம் கபிலர் விருது
- திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் மகாகவி உள்ளூர் விருது.
- மூத்த எழுத்தாளர்களுக்காக லில்லி தேவசிகாமணி விருது
- தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல் பரிசு பெற்றது.
- கவிஞர்கோ எனும் பட்டம் குன்றகுடி அடிகளர்களால் கவிஞர் சிற்பிற்கு வழங்கப்பட்டது.
கவிஞர் சிற்பியின் அறக்கட்டளை:
1996 இல் தொடங்கப்பட்ட சிற்பி அறக்கட்டளை தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் மற்றும் பரிசுகள் அளித்து வருகிறது.
மேற்கோள்:
தாஜ்மகால், ஒளிப்பறவை என்னும் நூலில் உள்ள கவிதை
- வாடாத வெள்ளைத் தாமரை
- மேகம் தொட்ட மோக மொட்டு
- பால்இடைக் குளிக்கும் பளிங்கு மண்டபம்...
- ஆசையின் மடியில் ஷாஜஹான்
- அள்ளி இறைத்த வெள்ளிக் காசு
- யமுனையின்,
- நீலக் கூந்தலில் நிகர்இல்லா வைரம்...
சர்ப்பயாகம் என்ற கவிதையில்,
- பரமபதத்துச் சோபானபடம் எங்கள் தேசம்
- அதில் கட்டங்கள் தோறும்
- நச்சுப் பாம்புகள் காத்துக் கிடக்கின்றன
- தலைமேல் பூமியை வைத்தால் சுமக்கும்
- ஆதிக்க சேடர்கள் (தமிழில் புதுக்கவிதை, ப.218)