Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-புதுக்கவிதை சிற்பி

சிற்பி

வாழ்க்கை குறிப்பு :

  • இயற்பெயர்: நடராச பாலசுப்ரமணிய சேது ராமசாமி
  • ஊர்: ஆத்துப்பொள்ளாச்சி (கோவை மாவட்டம்)
  • பெற்றோர்: பொன்னுசாமி கவுண்டர் - கண்டியம்மாள்
  • பிறப்பு : 29 – 07 – 1936

ஆசிரியர் குறிப்பு

சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் என பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.

கல்வி

  • கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
  • 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார்.
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ (தமிழ் இலக்கியம்) கற்றார்.

பணி:

  • 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக(Lecturer) பணியாற்றினார்.
  • 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

சிறப்பு:

லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவலை “அக்னிசாட்சி” எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

‘வானம்பாடிக்’ காலம்:

  • 'வானம்பாடி' தமிழகத்தில் இருந்து வெளிவந்த ஒரு கவிதைச் சிற்றிதழ் ஆகும்.
  • வானம்பாடிக் கவிதைகள் சமூகப்பொறுப்பை வலியுறுத்தும் இயக்கம்.
  • புவியரசு, ஞானி, முல்லைஆதவன், அக்கினிபுத்திரன், சிற்பி, கங்கை கொண்டான், தமிழ்நாடன்,சக்திக்கனல், மு.மேத்தா,ஈரோடு தமிழன்பன், ரவீந்திரன் முதலியோர் வானம்பாடிக் கவிஞர்களாவர்.

கவிதைத் நூல்கள்

  • நிலவுப்பூ (1963)
  • ஒளிப்பறவை (1971)
  • புன்னகை பூக்கும் பூனைகள் (1982)
  • சூரிய நிழல் (1990)
  • ஒரு கிராமத்து நதி (1998)
  • பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு (2001)
  • தேவயாணி (2006)
  • கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு)
  • சிரித்த முத்துக்கள் (1966)
  • சர்ப்ப யாகம் (1976)
  • மெளன மயக்கங்கள் (1982)
  • இறகு (1996)
  • பூஞ்யங்களின் சங்கிலி (1999)
  • மூடுபனி (2003)
  • நீலக்குருவி (2012)
  • ஆதிரை (1992) (கவிதை நாடகம்)

உரைநடை நூல்கள்:

  • 1. மகாகவி
  • 2. இலக்கிய சிந்தனைகள்
  • 3. மலையாளக் கவிதை
  • 4. சிற்பியின் கட்டுரைகள்
  • 5. படைப்பும் பார்வையும்
  • 6. புதிர் எதிர்காலம்
  • 7. மனம் புகும் சொற்கள்
  • 8. கவிதை நேரங்கள்
  • 9. காற்று வரைந்த ஓவியம்
  • 10. மின்னல் கீற்று
  • 11. நேற்றுப் பெய்த மழை
  • 12. அலையும் சுவடும்
  • 13. இல்லறம் நல்லறம்

சிறுவர் நூல்கள்:

  • 1. சிற்பி தரும் ஆத்திசூடி
  • 2. வண்ணப்பூக்கள்

வாழ்க்கை வரலாற்று நூல்கள்:

  • 1. ராமானுஜர் வரலாறு
  • 2. ம.ப.பெரியசாமி தூரன்
  • 3. பாரத ரத்னா சி. சுப்பிரமணியம்
  • 4. ஆர்.சண்முகசுந்தரம்
  • 5. சே.பா.நரசிம்மலு நாயுடு
  • 6. மகாகவி பாரதியார்
  • 7. நம்மாழ்வார்
  • 8. தொண்டில் கனிந்த தூரன்

மொழிபெயர்ப்பு நூல்கள்:

  • 1. சச்சிதானந்தன் கவிதைகள்
  • 2. கவிதை மீண்டும் வரும்
  • 3. காலத்தை உறங்க விடமாட்டேன்
  • 4. கே.ஜி சங்கரப்பிள்ளை கவிதைகள்

பரிசு மற்றும் விருது :

  • படைப்பு இலக்கியத்திற்காகவும் (2003), மொழிபெயர்ப்பிற்க்காவும் (2001) இருமுறை சாகித்திய அகாதமி விருது.
  • தமிழக அரசின் பாவேந்தர் விருது.
  • குன்றக்குடி ஆதீனம் கபிலர் விருது
  • திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் மகாகவி உள்ளூர் விருது.
  • மூத்த எழுத்தாளர்களுக்காக லில்லி தேவசிகாமணி விருது
  • தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல் பரிசு பெற்றது.
  • கவிஞர்கோ எனும் பட்டம் குன்றகுடி அடிகளர்களால் கவிஞர் சிற்பிற்கு வழங்கப்பட்டது.

கவிஞர் சிற்பியின் அறக்கட்டளை:

1996 இல் தொடங்கப்பட்ட சிற்பி அறக்கட்டளை தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் மற்றும் பரிசுகள் அளித்து வருகிறது.

மேற்கோள்:

தாஜ்மகால், ஒளிப்பறவை என்னும் நூலில் உள்ள கவிதை

  • வாடாத வெள்ளைத் தாமரை
  • மேகம் தொட்ட மோக மொட்டு
  • பால்இடைக் குளிக்கும் பளிங்கு மண்டபம்...
  • ஆசையின் மடியில் ஷாஜஹான்
  • அள்ளி இறைத்த வெள்ளிக் காசு
  • யமுனையின்,
  • நீலக் கூந்தலில் நிகர்இல்லா வைரம்...

சர்ப்பயாகம் என்ற கவிதையில்,

  • பரமபதத்துச் சோபானபடம் எங்கள் தேசம்
  • அதில் கட்டங்கள் தோறும்
  • நச்சுப் பாம்புகள் காத்துக் கிடக்கின்றன
  • தலைமேல் பூமியை வைத்தால் சுமக்கும்
  • ஆதிக்க சேடர்கள் (தமிழில் புதுக்கவிதை, ப.218)
Share with Friends