இரா.மீனாட்சி
வாழ்க்கை குறிப்பு:
- பிறந்த ஊர்: திருவாரூர்
- பெற்றோர்கள்: ராமச்சந்திரன் – மதுரம்
- பிறப்பு : 23 .01 . 1941
ஆசிரியர் குறிப்பு:
- கவிஞர் இரா. மீனாட்சி ஒரு தமிழ் கவிஞர் மற்றும் ஆய்வாளர் ஆவார்.
- சி. சு. செல்லப்பாவின் “எழுத்து” காலத்தில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர் கவிஞர் இரா. மீனாட்சி.
- பாரதி, பாரதிதாசனுக்குப் பின் பெண் உரிமை குறித்து அதிகம் எழுதியவர்.
- ஆசிரியப் பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர்.
- புதுச்சேரி ஆரோவில்லில் தொண்டாற்றி வருகிறார்.
- இவர் கவிதை முழுவதும் "மீனாட்சி கவிதைகள் "என்ற தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. அதில் 191 கவிதைகள் உள்ளன.
சிறப்பு:
- இவரது கவிதைகளை கலாச்சார உறவுகளுக்கான இந்திய மையம், மனித வள மேம்பாட்டு வளர்ச்சித்துறை ஆகியவை வெளியிட்டு உள்ளது.
- தமிழ்நாடு பல்கலைக்கழக பாடபுத்தகங்களில் இவரது கவிதை தொகுப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20-ம் நூற்றாண்டின் ஐந்து கவிஞர்களில் ஒன்றாக இவரது கவிதைகள் உள்ளன.
தற்போதைய சிறப்புப் பணி
- உறுப்பினர், சாகித்திய அகாதமி தமிழ் ஆலோசனைக் குழு.
- ஆசிரியர், ஆரோவில் கிராமச் செய்தி மடல் (மாத வெளியீடு)
- நிர்வாகி, ஆரோவில் நிர்வாகிகள்-ஊழியர் நல நிர்வாகத் திட்டம்
- அறங்காவலர், சங்கமம் குடியிருப்புத் திட்டம், ஆரோவில்
- பொறுப்பு உறுப்பினர், ஸ்ரீஅரபிந்தோ பன்னாட்டுக் கல்வி ஆய்வு மையம், ஆரோவில்
கவிதை நூல்கள்:
- நெருஞ்சி
- சுடுபூக்கள்
- தீபாவளிப் பகல்
- உதய நகரிலிருந்து
- மறு பயணம்
- வாசனைப்புல்
- கொடிவிளக்கு
- செம்மண் மடல்கள்
- மீனாட்சி கவிதைகள்
- ஓவியா
ஆங்கிலப் படைப்பு:
- இந்தியப் பெண்கவிகள் பேசுகிறார்கள்
சிற்றிதழ்களில் கவிதை
- எழுத்து, கணையாழி, தீபம், அன்னம்விடு தூது, கவி ஆகிய சிற்றிதழ்களில் கவிதை எழுதியவர்.
பரிசு மற்றும் விருதுகள்:
- சிற்பி இலக்கிய விருது (2005)
- புதுச்சேரி கவிஞர் கல்லாடனார் இலக்கிய விருது (2007)
- “உதய நகரிலிருந்து” என்ற புதுக் கவிதை நூலுக்கு தமிழக அரசு பரிசு கிடைத்தது (2006)
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது (2007)
- புதுவை பாரதி விருது (2010)
- கவிக்கோ விருது (2010)
- “செம்மண் மடல்கள்” எனும் நூலும் 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றுள்ளது.
- மேலும் இவர் சிறந்த சித்த மருத்துவ சேவைக்காக 'ஸ்ரீபுத்தூ மகரிஷி அறக்கட்டளை ' வழங்கிய “சித்த மருத்துவ சேவை செம்மல்” எனும் விருதினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்:
1978-'சுடுபூக்கள்' கவிதைத்தொகுப்பில் வெளியான இக்கவிதை
- மதுரை நாயகியே!
- மீனாட்சித்தாயே!
- படியேறி
- நடை தாண்டி
- குளம் சுற்றி
- கிளி பார்த்து
- உன்னருகே ஓடிவரும்
- உன்மகளை
- உன்மகனே ஏ
- வழிவம்பு செய்கின்றான்
- கோயிலிலும் காப்பில்லை
- உன் காலத்தில்
- அழகி நீ!
- எப்படி உலாப்போனாய்?